மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி.. சென்னை அப்பல்லோவில் சிகிச்சை!
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடலநலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியறிந்து தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. வைகோ கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலன் பாதிக்கப்பட்டு அதற்காக அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இன்று திடீரென வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் கால் இடறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் வைகோவின் விரலில் காயம் ஏற்பட்டதாகவும், இதற்காக சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. திடீரென வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவரது கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
வைகோ விரைந்து பூரண உடல் நலன் பெற வேண்டும் என்றும் பிரார்த்தித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு மே மாதம் கூட வைகோவுக்கு வீட்டில் கால் தவறி கீழே விழுந்ததில் இடது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் பூரண உடல் நனன் பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications