மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தை புத்துயிரூட்டும் திட்டம்... ஓய்வில் வைகோ... ஆய்வில் துரை வையாபுரி
சென்னை: மதிமுகவின் உட்கட்டமைப்பை வலிமைப்படுத்தும் பணிகளில் ஒரு அங்கமாக மாணவர் அணியை புத்துயிரூட்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது அக்கட்சியின் தலைமை.
கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் தங்கியிருக்கும் வைகோ, அவ்வப்போது கட்சி நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசி அவர்களை உற்சாகமூட்டுகிறார்.
கடந்த ஆண்டு அவருக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டதால் கட்சிப்பணி, அரசியல்பணிகளில் சற்று வேகத்தை குறைத்துக்கொண்டார்.

உட்கட்டமைப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. கொரோனா காரணமாக வீடுகளில் முடங்கி இருந்தாலும், தகவல் தொழில்நுட்ப வசதிகளின் உதவியோடு கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றனர் தலைவர்கள். நிர்வாகிகள் சுணங்கிவிடக் கூடாது என்பதற்காக அவர்களை ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் அவர்களுடன் அவ்வப்போது ஆலோசனைகள் நடத்துகின்றனர்.

மாணவர் அணி
அந்த வகையில் மதிமுகவின் அடிநாதமான மாணவர் அணியை புத்துயிரூட்டி கட்சியில் புதியவர்களை சேர்ப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாம். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஓய்வு தேவைப்படுவதால், இனி பழையபடி அவரால் அதிகமான சுற்றுப்பயணங்கள், கட்சி நிகழ்ச்சிகள் என கலந்துகொள்ள முடியாது. இதனால் அவருக்கு பதில் அவரது மகன் துரை வையாபுரியை கட்சிக்குள் கொண்டு வர மூத்த நிர்வாகிகள் வலியுறுத்துகிறார்கள்.

துரை வையாபுரி
ஆனால், வாரிசு அரசியல் என்ற விமர்சனம் வரும் என்றும், அது சரியாக இருக்காது எனவும் வைகோ தொடக்கம் முதலே தயக்கம் காட்டி மகனின் அரசியல் வருகைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். ஆனால் காலத்தின் தேவை உணர்ந்து இனி மகனுக்கு வைகோ கிரீன் சிக்னல் கொடுத்துவிடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன் முன்னோட்டமாக துரை வையாபுரியும் கட்சியின் உட்கட்டமைப்பை வலிமைப்படுத்தும் யோசனையை மனதில் வைத்துள்ளாராம்.

புதுவரவு
கொரோனா பதற்றம் தணிந்தபின்னர் தமிழக அரசியலின் புதுவரவாக துரை வையாபுரி இருப்பார் என மதிமுக நிர்வாகிகள் சிலர் உறுதியாக தெரிவிக்கின்றனர். இதனிடையே இப்போது கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருக்கும் வைகோ புத்தகங்கள் வாசித்து தனது நேரத்தை கழிப்பதோடு, மகனுக்கு ஒரு சில புத்தகங்களை படிக்க பரிந்துரைக்கிறாராம்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications