மதிமுக எம்எல்ஏ சதன் திருமலைக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை.. சென்னை நீதிமன்றம் அதிரடி
சென்னை: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி மதிமுக எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமாருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை செயிண்ட் ஜார் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நிதி நிறுவனத்தில் பெற்ற ரூ.1 கோடி கடனை திருப்பி செலுத்த வழங்கப்பட்ட 2 காசோலைகளும் பணமின்றி திரும்பியதாக நிதி நிறுவனம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக 2 மாதங்களுக்கு தண்டனை நிறுத்தி வைத்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2 மாதங்களுக்குள் ரூ.1 கோடியை திருப்பி அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதிமுக எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமார்
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார். இவர் மீது கடந்த 2016 ஆம் ஆண்டு காசோலை மோசடி வழக்கு பதியப்பட்டது.
சதன் திருமலைக்குமார் தன் தொழிலை மேம்படுத்துவதற்காக நியூ லிங் ஓவர்சீஸ் என்ற நிதி நிறுவனத்திடம் இருந்து கடனாக ரூ.1 கோடி வாங்கினார். பின்னர் இந்த கடனை செலுத்தும் விதமாக ரூ.1 கோடிக்கான காசோலையை சதன் திருமலைக்குமார் நிதி நிறுவனத்திடம் வழங்கினார்.
நீதிமன்றத்தில் வழக்கு
ஆனால் அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. இதையடுத்து மீண்டும் ஒருமுறை ரூ.1 கோடிக்கான காசோலையை கொடுத்து இருக்கிறார். ஆனால் அந்த காசோலையும் பணம் இன்றி திரும்பி வந்தது. அவர் போலி காசோலையை கொடுத்து ஏமாற்றியதாக தெரிகிறது. இதனால் சதன் திருமலைக்குமார் மீது நியூ லிங் ஓவர்சீஸ் நிதி நிறுவனம் சார்பில் சென்னை ஜார்ஜ் டவுண் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடர்ப்பட்டது.
இரண்டு ஆண்டுகள் ஜெயில் தண்டனை
இந்த காசோலை மோசடி வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில் இன்று நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் நீதிமன்றம் கூறுகையில், நியூ லிங் ஓவர்சீஸ் நிதி நிறுவனத்திடம் ரூ.1 கோடியை இரண்டு மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
ரூ.1 கோடியை திருப்பி அளிக்க வேண்டும்
ரூ.1 கோடியை 2 மாதங்களுக்கு வழங்காவிட்டால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அளிக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக 2 மாதங்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என்றும் அதற்கு ரூ.1 கோடியை திருப்பி அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications