நாடாளுமன்றத்தில் மீண்டும் முழங்க போகும் "சிங்கம்"... சின்னம் மட்டும்தான் சின்ன வருத்தம்!
கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் வைகோ போட்டியிட போகிறாரா என்பது தெரியவில்லை.
Recommended Video

சென்னை: ஒரு பக்கம் ஏகப்பட்ட சந்தோஷம், மறுபக்கம் சொல்லமுடியாத தர்மசங்கடத்தில் உள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!
எப்படியாவது ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என்று முழக்கமிட்டு வந்த வைகோவுக்கு கூட்டணி, தொகுதி பங்கீடு சம்பந்தமாக இழுபறி நீடித்து கடைசியில் நேற்றுதான் எல்லாம் கைகூடி வந்தது.
இதனால் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறார் வைகோ! இப்போது 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வைகோ மாநிலங்களவை எம்பியாக போகிறார். அதுவும் ஸ்டாலினால் இது நடக்கிறது. முன்பு ஒருகாலத்தில் திமுகவில் இருந்தபோதுதான் அவர் எம்பி வாய்ப்பை பெற்றார்.

"பார்லிமென்ட் ஆப் டைகர்
பாயிண்ட் பாயிண்ட்டாக பேசி காரசார விவாதத்தில் ஈடுபட்டு "பார்லிமென்ட் ஆப் டைகர்" என்று புகழப்பட்டவர்தான் வைகோ. இப்போது மீண்டும் அதே திமுகவால்தான் எம்பியாக உள்ளார் என்பதை நினைத்து தொண்டர்கள் ஏக குஷியில் உள்ளனர். ஆனால் மற்றொரு பக்கம் சின்னம்தான் கேள்வியாக இருக்கிறது. இதே நிலைதான் திருமாவளவனுக்கும். இருவருமே தங்களுக்கென ஒரு கட்சியை வளர்த்து தனித்தனி கொள்கைகள் மற்றும் சின்னம் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

சின்னம்
ஆனால் இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொன்னதும், கொஞ்சம் ஷாக்தான் ஆனார்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் கட்சி என்னவாது? கட்சி கொள்கைகள் என்னாவது? நிர்வாகிகள் என்ன நினைப்பார்கள்? சீட்டு கிடைக்கிறதே என்று போய்விட்டால் இவ்வளவு நாள் கட்சியை வளர்த்து வந்ததன் அர்த்தம் என்ன என்றெல்லாம் யோசிக்க துவங்கி உள்ளனர்.

5 வருட எம்பி
ஏனென்றால் இப்போது தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாகவே ஆனாலும் அவர் திமுகவின் எம்பியாகத்தான் இருப்பார். அதுவும் 5 வருஷத்துக்கு! இதற்கு நடுவில் எதுவுமே யாராலும் செய்ய முடியாது. இதுதான் இப்போது சிக்கல்.

சின்னம் சிக்கல்
தனிப்பட்ட முறையில் இதற்கு கருத்து சொல்ல முடியாது. அதனால் நிர்வாகிகளை கலந்தாலோசித்துதான் வைகோ முடிவு எடுப்பார் என தெரிகிறது. நேற்றுகூட செய்தியாளர்கள், உதயசூரியன் சின்னத்திலேயே மதிமுக போட்டியிடுமா என கேட்டதற்கு, "போட்டியிடும் சின்னம் குறித்து தற்போது கூற முடியாது" என்று சொன்னார். ஒருவேளை உதயசூரியன் சின்னத்தில் வைகோ போட்டியிட நேருமா என தெரியவில்லை.

27 வருடங்கள்
ஆனால் கடந்த 27 வருஷத்துக்கு முன்னால் யாரால், எந்த கட்சியை விட்டு வெளியேறினாரோ, இன்று அதே கட்சியில் சம்பந்தப்பட்டவராலேயே சீட் வாங்கி கொண்டு, உதயசூரியன் சின்னத்திலேயே நிற்க வேண்டி வருகிறதே என்று மதிமுகவினர் புலம்ப ஆரம்பித்துள்ளார்களாம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications