தீபாவளிக்கு மறுநாள் சென்னையில் இறைச்சி கடைகள் மூடல்.. வந்த திடீர் அறிவிப்பு! என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுக்க நாளைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகிறார்கள். இதற்கிடையே தீபாவளிக்கு மறுநாள் அதாவது அக்டோபர் 21ம் தேதி சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் இறைச்சிக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவில் மிக கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகத் தீபாவளி இருக்கிறது. இந்தாண்டு தீபாவளி நாளை திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. எப்போதும் மக்கள் தீபாவளியை தங்கள் சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாடவே விரும்புவார்கள். இதனால் சென்னை, கோவை உட்படப் பெருநகரங்களில் வசித்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகிறார்கள்.

Diwali 2025 Diwali 2025

பொதுமக்கள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் கூட இயக்கப்பட்டன. கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து சுமார் 6.15 லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் டிராபிக் நெரிசல் கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக ஜிஎஸ்டி சாலை வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி உள்ளது.

இதற்கிடையே தீபாவளிக்கு மறுநாள், அதாவது அக்டோபர் 21ம் தேதி சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் இறைச்சிக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மகாவீர் நிர்வான் தினம் வருகிறது. இதைக் கருத்தில் கொண்டே அன்றைய தினம் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் இறைச்சிக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும் வருகின்ற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.

இதேபோல், ஜெயின் கோவில்களிலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட்டு இறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த உத்தரவினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தீபாவளிக்குச் சொந்த ஊர்களுக்குச் சென்ற பொதுமக்கள், ஊர் திரும்ப வசதியாகத் தீபாவளிக்கு மறுநாள், 21ம் தேதி பொது விடுமுறையாகவும் தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+