சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மருத்துவ மாணவி தற்கொலை
சென்னை: சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மருத்துவ மாணவி, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தந்தை மரணத்தால் மனம் உடைந்து பல் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் இந்து (27). செங்கல்பட்டை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் பிடிஎஸ் முடித்துள்ளார். அத்துடன் அங்கேயே, பல் மருத்துவம் மேற்படிப்பான எம்டிஎஸ் படித்து வந்தார். அத்துடன் அதே பல் மருத்துவமனை கல்லூரியில் டாக்டராகவும் பணியாற்றி வருகிறார்.

சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியின் மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்தார். நேற்று காலை இந்து, நீண்ட நேரமாக அறையில் இருந்து வெளியே வரவில்லை.
இதனால், அங்கிருந்த ஊழியர்கள், அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதையடுத்து ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது, அங்குள்ள மின்விசிறியில், இந்து தூக்கிட்டு சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
தகவலறிந்து, மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், இந்துவின் தந்தை பழனிவேலு கடந்த மாதம் 11ம் தேதி மாரடைப்பால் இறந்தார்.
இதனால் அவர், மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றார்.












Click it and Unblock the Notifications