சேலம், நெல்லை, கடலுார் மாவட்டங்களுக்கு வரும் பிரம்மாண்ட நுாலகங்கள்.. டெண்டர் கோரிய தமிழக அரசு!
சென்னை: மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து மேலும் 3 மாவட்டங்களில் பிரம்மாண்ட நூலகங்களை கட்டுவதற்கு தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி நெல்லை, கடலூர் மற்றும் சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் பிரம்மாண்ட நூலகங்களை அமைக்க தமிழக அரசு தரப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் சேலம், நெல்லை மற்றும் கடலூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் நூலகங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்ட நிலையில், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பிரம்மாண்ட நூலகம் கட்டப்பட்டது.

இது மதுரை மாணவர்கள், இளைஞர்கள், போட்டித் தேர்வுகளை எழுதுவோருக்கு மிகப்பெரிய அறிவுக் களஞ்சியமாக திகழ்ந்து வருகிறது. இதேபோல் கோவையிலும் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகள் 75 சதவிகிதம் வரை முடிவடைந்த நிலையில், திருச்சியில் காமராசர் பெயரில் நூலகம் மற்றும் அறிவுசார் மையமும் அமைக்கப்பட்டு வருகிறது.
இது அந்தந்த மாவட்டங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது அடுத்த 3 மாவட்டங்களில் நூலகங்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை போல் அடுத்ததாக சேலம், நெல்லை மற்றும் கடலூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் நூலகங்கள் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான தமிழக அரசு டெண்டர் கோரி இருக்கிறது. சேலத்தில் பாரதிதாசன் பெயரில் 75 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.74 கோடி செலவில் நூலகம் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் நெல்லையில் காயிதே மில்லத் பெயரில் 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 5 தளங்களுடன் ரூ.69 கோடியில் நூலகம் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் கடலூரில் அஞ்சலை அம்மாள் பெயரில் ரூ.80 கோடி செலவில் நூலகம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான டெண்டர் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, அடுத்தக் கட்ட பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கோவை மற்றும் திருச்சியில் விரைவில் நூலகத்தின் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, இந்த ஆட்சியிலேயே திறந்து வைக்க வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.
-
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ்












Click it and Unblock the Notifications