முல்லை பெரியாறு, மேகதாது.. அனைத்து வழிகளிலும் வஞ்சிக்கப்படும் தமிழகம்.. பெரும் ஆபத்தில் விவசாயிகள்
சென்னை: முல்லைப் பெரியாறுக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுக்கு அனுமதி அளித்த கையோடு, அடுத்த சில மாதங்களிலேயே கர்நாடக அரசு மேகதாது பகுதியில், அணையை கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது மத்திய அரசு.
மத்திய அரசின் அடுத்தடுத்த இந்த அனுமதிகள் காரணமாக, நதிநீர் பங்கீட்டில், தமிழகம் பெரும் சிக்கலான சூழ்நிலையை சந்தித்து வருகிறது.
கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் 142 அடி உயரத்திற்கு தண்ணீரை சேமித்து வைக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.
[மேகதாது.. கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்! அவசர ஆலோசனைக்கு குமாரசாமி அழைப்பு]

குடிநீர், விவசாயம்
முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக தண்ணீர் செல்கிறது. ஆனால் இவ்வாறு தமிழகம் பலன் பெறுவதை கேரள அரசியல் கட்சிகள் விரும்பவில்லை. தொடர்ச்சியாக பல்வேறு வதந்திகள் மூலமாக முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக காட்டியபடி உள்ளன.

வதந்திகள்
இதன் ஒரு பகுதியாக அணை பலவீனமாக இருப்பதாக சொல்லிவிட்டு புதிய அணை கட்டும் திட்டத்திற்கு கேரள அரசு காய் நகர்த்துகிறது. அந்த திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறுவதற்காக சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த அனுமதி கோரி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம், கேரள அரசு விண்ணப்பித்திருந்தது.

சுற்றுச்சூழல் அனுமதி
கேரளாவின் கோரிக்கையை, ஏற்றுக் கொண்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், முல்லை பெரியாறில், புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த அனுமதி வழங்கியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம், இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

இப்போது காவிரி ஆறு
இந்த நிலையில்தான் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ஆய்வு செய்ய அனுமதி கேட்டிருந்தது. இந்த ஆய்வுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. முல்லைப்பெரியாறு மற்றும் காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரங்களில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளும், தீர்ப்புகளும் தமிழக அரசுக்கு சாதகமாக உள்ளன. முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது, மேகதாதுவில் புதிய அணை கட்டுவது உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்படாத வாதங்கள். ஆனால் அதையும் மீறி முறையே கேரளா மற்றும் கர்நாடக அரசுகள் மத்திய அரசை அணுகியதும் மத்திய அரசு, அனுமதி வழங்கியதும் தமிழகத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் லாபம்
கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ள கட்சியாக பாரதிய ஜனதா இருக்கிறது. தமிழகத்தில் அவர்களுக்கு வாக்குவங்கி கிடையாது. நோட்டாவுடன் தான் போட்டி போடுகின்றனர் பாஜக வேட்பாளர்கள். எனவே கர்நாடகாவிற்கு ஆதரவாகவும், தமிழகத்திற்கு எதிராகவும், மத்திய அரசு இது போன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது என்று கருதப்படுகிறது.

மொத்த தமிழகத்திற்கும் ஆபத்து
முல்லை பெரியாறு மற்றும் காவிரி நீர் ஆதாரங்களில் அடுத்தடுத்து வழங்கப்படும் நெருக்கடி காரணமாக தமிழகத்தின் தென் மாநிலங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் கடும் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர். தமிழக அரசு உடனடியாக அரசியல் மற்றும் சட்ட வழிமுறைகளை பயன்படுத்தி முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவது மட்டுமின்றி மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். செய்யுமா மாநில அரசு?
-
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக்












Click it and Unblock the Notifications