தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னையில் எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குமரி கடலில் மேலடுக்கு காற்றின் சுழற்சியால் தென் தமிழகத்திலும் தென் கேரளாவிலும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கன்னியாகுமரியில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Meteorological department announces that 8 districts gets rain

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். அது போல் நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புண்டு.

குமரிக் கடல், லட்சத்தீவு, மாலத்தீவு ஆகிய கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இந்த பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வரை சூறைக் காற்று வீசும். மேற்கண்ட 8 மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

கன்னியாகுமரியை சுற்றியுள்ள பகுதிகளில் நிச்சயம் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+