Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுள்ளென்று அடித்த வெயில்..ஜில்லென்று இடியுடன் கொட்டிய மழை..சட்டென்று மாறிய வானிலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுள்ளென்று அடித்த வெயிலுக்கு இதமாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. பிற்பகல் நேரத்தில் கருமேகங்கள் கூடி திடீரென பெய்த மழையால் குளிர்ச்சியான காற்று வீசி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தென்காசி, தேனி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்த நிலையில் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Meteorological Department has announced that heavy rain will continue for 5 days in Tamil Nadu

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் பல ஊர்களில் அவ்வப்போது பெய்யும் மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளிலும் டி.கல்லுப்பட்டி, டி.குண்ணத்தூர் பகுதிகளிலும் காலை முதலே வெயில் சுள்ளென்று அடித்தது. திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து கனமழையாக கொட்டித்தீர்த்தது.

மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான குற்றாலம், மணல்மேடு, சித்தர்காடு, கோமல், உளுந்துகுப்பை உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகலில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதே போல தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
குற்றாலத்தில் வீசிய அனல் காற்றுக்கு இதமாக பலத்த மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம், போடி உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென மழை பெய்தது. கொட்டித்தீர்த்த மழையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 5 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+