செப் 7ம் தேதி முதல் சென்னையில் ஓடப்போகுது மெட்ரோ ரயில்... மகிழ்ச்சியான அறிவிப்பு
சென்னை: செப்டம்பர் 7ம் தேதி முதல் சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்த மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி செயல்பட தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு கடந்த ஐந்து மாதங்களுக்கு பின்னர் முதல்முறையாக முழுமையாக போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இபாஸ் முறையை ரத்து செய்யதுள்ளது. ஏராளமான தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது.

செப்டம்பர் 1ம் தேதி முதல் பேருந்துகள் இயங்கப்பட உள்ளது தமிழகமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பேருந்து சேவை முழுமையான போதிலும், பயணிகள் ரயில் சேவைக்கு அனுமதி இன்னமும் அளிக்கப்பட வில்லை. சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மெட்ரோ ரயில் சேவைக்கு செப்டம்பர் 7ம் தேதி முதல் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல் முறைப்படி அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் சென்னையில் மெட்ரோ ரயில்களில் வரும் செப்டம்பர் 7ம் தேதி முதல் வேலைக்கு செல்ல முடியும். கிட்டத்தட்ட சென்னை இந்த தளர்வுகளால் பழைய நிலையை மீண்டும் அடைய போகிறது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசு அறிவித்துள்ள இந்த தளர்வுகள் நிச்சயம் உதவும்.












Click it and Unblock the Notifications