முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான 16 அவதூறு வழக்குகள்.. செப். 17ல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த 16 கிரிமினல் அவதூறு வழக்குகளை திரும்பப் பெறுவது தொடர்பாக செப்டம்பர் 17ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Recommended Video
கடந்த 2011 முதல் 2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கு எதிராக பல்வேறு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது. அரசுக்கு எதிராக பேசிய பல்வேறு தலைவர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு, வாக்கிடாக்கி கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்த அப்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.அரசுக்கு எதிராகவும், முதலமைச்சர், அமைச்சர்களுக்கு எதிராக ஆதாரம் அற்ற குற்றசாட்டுகள் கூறியதாக ஸ்டாலின் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
16 கிரிமினல் அவதூறு வழக்குகள் அப்போதைய தமிழ்நாடு அரசின் சார்பில் ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்டது.இந்த நிலையில் அண்மையில் பொறுப்பேற்ற திமுக அரசு, கடந்த ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்.பி, எம்.எல்.ஏ-களுக்கு எதிரான வழக்குகளை திரும்ப பெறும் முன்னர் சம்மந்தபட்ட மாநில உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை திரும்பப்பெற தமிழக அரசின் சார்பில் அரசாணை பிறப்பிக்க இருப்பதாகவும் 16 வழக்குகளை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரபட்டது.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.ஸ்டாலின்க்கு எதிராக நிலுவையில் உள்ள 16 கிரிமினல் அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற அனுமதிப்பது தொடர்பான மனு மீது வரும் 17ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கபடும் என தெரிவித்து வழக்கை தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications