தமிழகத்தில் இந்த 21 மாவட்டங்களில் மழை காத்திருக்கு.. வானிலை மையம் தகவல்! குடையை மறக்காதீங்க மக்களே

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்து வந்த நிலையில், திடீரென இப்போது மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனிடையே அடுத்த 3 மணி நேரத்திற்குத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு கடந்த சில காலமாகவே வறண்ட வானிலையே நிலவியது. மாநிலத்தில் பல இடங்களில் பிப். மாதமே வெயில் அதிகரிக்கத் தொடங்கியது.

பொதுவாக ஏப்ரல், மே காலத்தில் தான் வெப்பம் சதத்தை அடிக்கும். ஆனால், இந்த முறை அதற்கு முன்னதாகவே வெப்பம் சதமடித்துவிட்டது. ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஏற்கனவே வெப்பம் 100 தாண்டிவிட்டது.

வானிலை

வானிலை

இதனால் மக்கள் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்தனர். பிப். மாதமே வெப்பம் அதிகரித்த நிலையில், வெளியே செல்லக் கூட மக்கள் சிரமப்பட்டனர். இந்தாண்டு இப்போது வெப்பம் இந்தளவுக்கு அதிகமாக இருக்கும் நிலையில், வரும் கோடைக் காலத்தில் வெப்பம் மேலும் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பல்வேறு காரணங்களால் வெப்பம் வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மழை

மழை

இதற்கிடையே அதிகரிக்கும் வெப்பத்திற்குப் பதில், இதமாகக் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இத்தனை நாட்கள் வெயிலில் சிக்கித் தவித்த பொதுமக்களுக்கு இது நிம்மதியைத் தருவதாக அமைந்துள்ளது. இப்படிப் பெய்யும் மழையால் வெப்பமும் கணிசமாகக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்றும் சென்னை உட்பட பல இடங்களில் மழை பெய்தது. இதனிடையே இன்றும் மழை தொடரும் என்றே வானிலை மையம் கூறியுள்ளது.

எந்த மாவட்டங்களில் மழை

எந்த மாவட்டங்களில் மழை

இதனிடையே தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை, அதாவது அடுத்த 3 மணி நேரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை, புதுக்கேட்டை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

வானிலை மையம்

வானிலை மையம்

இது மட்டுமின்றி தென்காசி, நெல்லை, கோவை, ஈரோடு, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீண்ட வெப்பத்திற்கு இடையே, திடீரென வந்த மழை தொடர்வதால் பொதுமக்கள் ஹேப்பியாக உள்ளனர்.

பொதுமக்கள் ஹேப்பி

பொதுமக்கள் ஹேப்பி

ஏற்கனவே, நேற்றைய தினம் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. அதிலும் குறிப்பாகச் சென்னையில் பல பகுதிகளில் அதிகாலை முதலே நல்ல மழை இருந்தது. இந்தச் சூழலில், இன்றும் காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வாக்கிங் உள்ளிட்ட உடற்பயிற்சிகள் செய்ய வெளியே வந்த பொதுமக்கள் சில் கிளைமேட்டை என்ஜாய் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+