500 அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுப்பதாக நான் சொன்னேனா? அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேசம்!
சென்னை: 500 அரசு பள்ளிகளை தனியாருக்கு தருவது தொடர்பாக வெளியான செய்திக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மறுப்பு தெரிவித்துள்ளார். செய்தியின் உண்மைத்தன்மையை அறியாமலேயே கண்டனத்தை பதிவு செய்வதா? என ஆதங்கம் தெரிவித்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று திறக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நீலாங்கரை பகுதியில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்து அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பிய மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை, அறிவிப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கவில்லை. பத்திரிகைகளில் வெளியான செய்தி தவறானது; செய்தியின் உண்மைத்தன்மையை அறியாமலேயே கண்டனத்தை பதிவு செய்வதா? அரசுப் பள்ளிகள் எங்கள் பிள்ளைகள்; அதை யாரும் தத்து கொடுக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.
"முதலில் நான் என்ன பேசினேன் என்பதை பாருங்கள். சந்தேகம் இருந்தால் கேளுங்கள். உறுதிப்படுத்தாமல் கண்டனம் தெரிவித்தோருக்கும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். தொடர்ந்து தவறான செய்திகளுக்கு விளக்கம் கொடுத்து கொடுத்தே சோர்வடைந்து விட்டேன். சிஎஸ்ஆர் நிதி மூலம் தனியார் பங்களிப்புடன் அரசு பள்ளிகளை மேம்படுத்த மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தனியார் பள்ளி விழாவில் முழுமையாக என்ன பேசப்பட்டது என்றுகூட தெரியாமல் 'கண்டிக்கிறோம்' என்று அறிக்கைக் கொடுப்பவர்களுக்கு என்னுடைய 'வன்மையான கண்டனத்தை' தெரிவிக்கிறேன் உங்களால் எங்களுடைய பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். உண்மை என்னவென்று தெரிந்துக்கொண்டு அறிக்கைக் கொடுங்கள்" என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
500 அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியிருப்பதாக தகவல் வெளியானது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு தத்துக் கொடுப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இதற்கு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் மறுத்து அறிக்கை வெளியிட்டது. அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவே, சமூக பங்களிப்பு நிதியின்கீழ் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு இருக்கும் என்றுதான் சொல்லப்பட்டது. எந்த இடத்திலும் அரசுப் பள்ளிகளை தத்தெடுப்போம் என்று யாரும் சொல்லவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.
வரும் கல்வியாண்டில் 500 அரசு பள்ளிகளைத் தேர்வு செய்து அருகாமையில் இருக்கிற தனியார் பள்ளிகள் அந்த பள்ளிகளில் பயில்கிற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடும் வகையிலே நூலகங்கள், பள்ளிக்கு பெயிண்ட் பூசுதல், பள்ளி விளையாட்டு மைதானங்களை சுத்தப்படுத்துதல், தூய்மைப்படுத்துதல் விளையாட்டு உபகரணப் பொருட்களை வாங்கிக் கொடுத்தல், மாணவர்களுக்குத் தேவையான இதர பொது அறிவு வளர்ச்சிக்கான புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தல், அதற்கான பொருட்கள் வாங்கிக் கொடுத்தல், கணினி உள்ளிட்ட கண்டுபிடிப்புகள் சம்பந்தப்பட்ட நவீன பொருட்களை வாங்கிக் கொடுத்தல் என்று பல்வேறு வகையிலே உதவிட திட்டமிட்டுள்ளோம்.
அந்த நோக்கத்தின் அடிப்படையில் மாணவர்களின் வளர்ச்சிக்காக அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த CSR மூலம் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு இருக்கும் என்று தான் சொல்லப்பட்டதே தவிர எந்த இடத்திலும் அரசு பள்ளிகளை தத்தெடுப்போம் என்று நாங்களும் சொல்லவில்லை, தத்தெடுப்போம் என்று அமைச்சர் உள்ளிட்ட அதிகாரி பெருமக்கள் யாரும் சொல்லவில்லை என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் தெரிவித்திருந்தது.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications