Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மாபெரும் முறைகேடு!" நீட் எழுதியது வெறும் 3500 பேர் தான்! ஆனால் பாஸ் ஆனது 88,000 பேர்- அன்பில் மகேஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் அன்பில் மகேஷ், கடந்த காலங்களில் நீட் தேர்வில் முறைகேடும் நடந்துள்ளதாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதைத் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பான தீர்மானத்தையும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பியுள்ள போதிலும் அதற்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை.

 Minister Anbil Mahesh said more students passed in NEET then appeared

இதற்கிடையே நீட் தேர்வு ரத்தை வலியுறுத்தி திமுக இளைஞரணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதனைச் சென்னை கலைவானர் அரங்கில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அன்பில் மகேஷ்: அதேபோல திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அன்பில் மகேஷ், "நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற நாம் அனைவரும் ஒன்றாகப் போராட வேண்டும்.. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒன்றாகப் போராடினால் மட்டுமே நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியும்.. அனைவரும் சமம் என்று தான் திராவிட இயக்கங்கள் அனைவருக்கும் சீருடைகளை வழங்கி பள்ளிக்குச் செல்ல வலியுறுத்தியது" என்று அவர் தெரிவித்தார்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இட ஒதுக்கீடு, இந்தி எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் என்று தமிழ்நாடு உரிமைகளை மீட்டெடுப்பதில் திராவிட இயக்கம் தான் முதலில் குரல் கொடுக்கும். நீட் விவகாரத்தில் உண்ணாவிரதப் போராட்டம், கையெழுத்து இயக்கமாக என்று நீட் விலக்கு பெறச் சட்ட போராட்டங்களைத் தீவிரமாக நடத்தி வருகிறோம். நிச்சயம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம்.

ஈகோ மோதல்: இந்தியா கூட்டணி வெற்றி பெறும் போது 15 மாதத்தில் நிச்சயம் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வருவோம்.. அதேபோல நீட் விலக்கையும் நிச்சயம் பெறுவோம். ஆளுநர் மாளிகைக்கு இந்த நீட் விவகாரத்தில் தனி தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பினோம்.

ஆனால், அது அங்கேயே தூங்கிக் கொண்டு இருந்தது. அழுத்தம் கொடுத்த பிறகே அதை அனுப்பினார். இது ஒன்றும் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே உள்ள ஈகோ மோதல் இல்லை. இது பல லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவு. இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

இப்போது இருக்கும் மத்திய அரசு நமது பக்கம் இல்லை. இந்த வேதனையும் பாரமும் இருக்கவே செய்கிறது. மத்திய அரசு நமக்கான அரசாக அமையும் போது நிச்சயம் நாம் சொல்லும் நியாயமான விஷயங்களைக் காது கொடுத்துக் கேட்பார்கள். இந்த நீட் விலக்கில் அனைவரும் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்க வேண்டும். முதல்வர் கூறியது போல இது ஒரு பலி பீடம்.. இந்த நீட் தேர்வால் மாணவர்கள் மரணத்திற்கும் சிறைச்சாலைகளுக்கும் செல்கிறார்கள்.

முறைகேடு: திரிபுரா மாநிலத்தில் நீட் தேர்வை எழுதியதே 3700 பேர் தான்.. ஆனால் 88 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றதாகச் சொன்னார்கள். கேட்டால் அச்சுப் பிழை என்றார்கள். உத்தரகண்ட்டிலும் இதேபோலே தேர்வு எழுதிய மாணவர்களை விட அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகச் சொன்னார்கள்.

மேலும், நீட் தேர்வு எழுதச் சென்ற குழந்தைகளின் உடைகளைக் கிழித்தார்கள்.. சோதனை என்ற பெயரில் மாணவர்களை என்னவெல்லாம் செய்தார்கள் எனப் பார்த்தோம்.. ஆனால் புதிய ஆடைகளைக் கொடுத்து பள்ளிக் கூடத்திற்குச் செல்லுங்கள் என்றதே திராவிட மாடல் அரசு" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+