சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காலை சிற்றுண்டிக்காக அரசு பள்ளி நேரம் மாற்றியமைப்பா?.. அமைச்சர் அன்பில் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: காலை சிற்றுண்டிக்காக அரசு பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.

படிக்கும் பிள்ளைகள் வெறும் வயிற்றுடன் பள்ளியில் படிக்கக் கூடாது என்பதற்காகத்தான் மதிய உணவு திட்டமும் சத்துணவு திட்டமும் கொண்டு வரப்பட்டது. இது பெரும் வரவேற்பை பெற்ற திட்டமாகும்.

உலகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... அமெரிக்கா, சீனா நாடுகள் அச்சம் - 4 வது அலை தாக்குமா? உலகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... அமெரிக்கா, சீனா நாடுகள் அச்சம் - 4 வது அலை தாக்குமா?

தமிழகத்தை பார்த்து மற்ற மாநிலங்களிலும் கொண்டு வரப்பட்டது. அந்த அளவுக்கு வெற்றி பெற்ற இந்த திட்டத்தில் கூடுதல் அம்சங்களை அவ்வப்போது வரும் ஆட்சியாளர்கள் சேர்த்து கொண்டே வருவார்கள்.

முட்டை

முட்டை

அந்த வகையில் முட்டை, சுண்டல் பயறு தொடங்கி தற்போது தேங்காய் துண்டை சத்துணவில் சேர்க்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்து கடந்த 7ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

அதில் முக்கியமானது சென்னை மாநகராட்சி காலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டமாகும். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும். முதல் கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சி, தொலைதூர கிராமங்களில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை நேரத்தில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்.

காலை சிற்றுண்டி திட்டம்

காலை சிற்றுண்டி திட்டம்

இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்குவோம். இந்த திட்டம் படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். காலை சிற்றுண்டி எனும் போது காலை வேளைகளில் அரசு பள்ளிகளின் நேரங்கள் மாற்றியமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

Recommended Video

    சென்னை: மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதே எங்கள் ஆசை... அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி!
    அன்பில் மகேஷ்

    அன்பில் மகேஷ்

    இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில் காலை சிற்றுண்டி திட்டத்திற்காக அரசு பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்படுவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம் என்றார்.

    English summary
    Free Breakfast scheme (இலவச காலை சிற்றுண்டி திட்டம்): முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள இலவச காலை சிற்றுண்டி திட்டத்திற்காக பள்ளி மாணவர்களின் நேரம் மாற்றியமைக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X