அரசு பள்ளியில் திடீர் ஆய்வு.. மாணவர், ஆசிரியர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செல்பி எடுத்து கொண்டார்.
Recommended Video
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கல்பாக்கத்தில் அரசினர் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு இருபாலரும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வழக்கம்போல் பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் எடுத்து கொண்டிருந்தனர்.

அமைச்சர் ஆய்வு
இந்நிலையில் இன்று கல்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் அமைச்சர் தா மோ அன்பரசன் ஆகியோர் திடீரென்று சென்றனர். இதையடுத்து 2 அமைச்சர்களும் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவர்களின் நலன் குறித்தும் மாணவர்களின் கல்வி குறித்தும் அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.

மாணவர் சேர்க்கை பற்றி கேட்பு
பின்னர் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் காலத்தில் பள்ளியில் திறக்கப்பட்ட கட்டிடத்தை அவர்கள் பார்வையிட்டனர். அதோடு மாணவர்களின் சேர்க்கை நிலவரம் பற்றி கேட்டறிந்தனர். இந்த வேளையில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தற்போது மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதாக ஆசிரியர்கள் கூறினார்.

கூடுதல் கட்டிட வசதி கோரிக்கை
அதேவேளையில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக உள்ளதால் கூடுதலாக கட்டிட வசதி தேவைப்படுவதாக ஆசிரியர்களும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகமும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைத்தனர். இதுபற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

செல்பி எடுத்து கொண்ட அமைச்சர்
ஆய்வின் முடிவில் மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்களுடன் அமைச்சர் செல்பி எடுத்துக்கொண்டார். இந்த ஆய்வின் போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பாபு, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
-
1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு.. முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு! கோடை விடுமுறை தேதி அறிவிப்பு -
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.. தலைமை ஹாஜி அறிவிப்பு! -
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
18 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. இடி,மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு!












Click it and Unblock the Notifications