காவிரிக்காக.. சித்தராமையாவிடம் ஏன் ஸ்டாலின் பேசவில்லை தெரியுமா.. துரைமுருகன் சொன்ன முக்கிய காரணம்
சென்னை: காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது கர்நாடகாவின் முடிவு தெளிவாக தெரிந்துவிடும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இனி கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், நம் லீகல் வெப்பனை விட்டுவிடுவோம் என துரைமுருகன் கூறியுள்ளார்.
காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நேற்று டெல்லியில் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. அப்போது அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அரசு, அடுத்த 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட வலியுறுத்தப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு வருகிற 21ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதுவரை கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடுகிறதா என பார்க்க வேண்டும்.
இல்லையெனில் தற்போது நிலை குறித்து இணைத்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். காவிரி விவகாரத்தில் கடைசி வாய்ப்பு உச்சநீதிமன்றத்தை அணுகுவது மட்டும்தான். உச்சநீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, 21aஅம் தேதி உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கின் முடிவை தெரிந்து கொண்டு தேவைப்பட்டால் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டலாம். காவிரி விவகாரத்தில் ஒவ்வொரு அங்குலத்திலும் கர்நாடக அரசு எதிர்ப்பை பதிவு செய்கிறது. கர்நாடக அரசின் எதிர்ப்பை சந்தித்து, தமிழ்நாட்டு மக்களுக்கு காவிரி நீரை பெற்றுத் தந்து கொண்டிருக்கிறோம். எனத் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், கர்நாடகா முதல்வரிடம் பேசினால் காவிரி பிரச்சனை சுமுகமாக முடிந்துவிடும், ஆனால் முதல்வர் ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க மறுக்கிறார் எனக் கூறப்படுகிறதே எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "பேசிவிட்டால் குளோஸ் ஆகிவிடும். எங்களைக் கெடுப்பதற்கு அப்படிச் சொல்கிறார்கள். பேச்சுவார்த்தை சரி இல்லை என்றுதான் நாம் கோர்ட்டுக்கு சென்றிருக்கிறோம். மறுபடி, நாம் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றால், நமது சட்ட ஆயுதத்தை விட்டுவிடுவதாகிவிடும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications