இரவு 11 மணிக்கு வந்த போன்! முதல்வர் தூங்குவதே கிடையாது! எ.வ.வேலு பகிர்ந்த ருசிகரத் தகவல்!
சென்னை: மூன்று நாட்களுக்கு முன்னர் இரவு 11 மணிக்கு போன் செய்த முதலமைச்சர் ஸ்டாலின், தன்னை திருக்குறள் புத்தகத்தில் 949வது திருக்குறளை படிக்குமாறு கூறிய நிகழ்வை மேடையில் பகிர்ந்துகொண்டார் அமைச்சர் எ.வ.வேலு.
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை தூங்குவதே கிடையாது என்றும் இந்தியாவிலேயே இவரை போல் வேறு எந்த முதலமைச்சரும் இவ்வளவு நேரம் விழித்திருக்க மாட்டார்கள் எனவும் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
கருணாநிதி நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் எ.வ.வேலு, சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார். அப்போது குறிப்பிட்ட அவர், முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது தூங்குகிறார், எப்போது விழித்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது எனத் தெரிவித்தார்.

மூன்று நாட்களுக்கு முன்னர் இரவு 11 மணிக்கு தன்னை அழைத்த முதல்வர் ஸ்டாலின், என்ன தூங்கிவிட்டீர்களா என வினவியதாகவும், தூங்கவில்லை எனக் கூறியதை அடுத்து திருக்குறள் புத்தகத்தை எடுத்து 949வது திருக்குறளை படியுங்கள் என தன்னிடம் அறிவுறுத்தியதாகவும் கூறினார்.
எப்போதுமே தனது அறையில் கருணாநிதி விளக்கவுரை எழுதிய திருக்குறள் புத்தகம் இருக்கும் என்பதால், தானும் அதனை உடனே எடுத்து படித்ததாகவும், அதனை கருணாநிதி சிலைக்கு கீழே தமிழிலும் ஆங்கிலத்திலும் பொறிக்க வேண்டும் என தனக்கு இரவு 11 மணிக்கு முதல்வர் உத்தரவு போட்டதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே திறப்பு விழாவுக்கு முந்தைய நாள் மருத்துவமனை வளாகத்தை தாம் பார்வையிட வந்துவிட்டு கார் ஏறச் சென்ற போது, தனது காதுபடவே ஹாஸ்பிடல் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி இருக்கு என ஹாஸ்பிடலை சுற்றியுள்ள பகுதி மக்கள் பேசியதாகவும் கூறினார்.
-
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
போலீசில் சிக்கிய நடிகை ஜூலி.. மெரினாவில் திமுகவுக்கு ஆதரவு - தவெகவிற்கு எதிர்ப்பு பிரசாரத்தால் வந்த சிக்கல் -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
சேகர் பாபுவை குறிவைத்த ஐடி.. சென்னையை பரபரபாக்கிய சோதனை! திமுக சீனியர்களுக்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி? -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
Election Exclusive: மதுரை மத்தியில் தலைக்கு மேல் கத்தி.. குட்டையை குழப்பும் அழகிரி & கோ! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய திமுக! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல்












Click it and Unblock the Notifications