ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் பருப்பு திட்டம் எப்படி வந்தது? - ருசிகரமான நினைவை பகிர்ந்த அமைச்சர்!
சென்னை : ரேஷன் கடைகளில் மானிய விலையில் பருப்புகள் வழங்கப்படும் திட்டம் எப்படி உருவானது என்பது பற்றி ருசிகரமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் அமைச்சர் எ.வ.வேலு.
தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில், மானிய விலையில், அத்தியாவசிய தேவையான பருப்புகளும் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டம் 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது.
அப்போது உணவுத் துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலுவிடம், முதல்வராக இருந்த கருணாநிதி கேட்ட கேள்வி தான், சிறப்பான திட்டமாக உருவானது என நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார் அமைச்சர் எ.வ.வேலு.
விளிம்பு நிலை மக்களின் அத்தியாவசிய வாழ்வாதாரத்துக்கான திட்டமான மானிய விலையில் சமையல் பொருட்கள் வழங்கும் திட்டம் உருவான விதத்தை அமைச்சர் எ.வ.வேலு பகிர்ந்துகொண்டுள்ளார்.

கருணாநிதி பிறந்த நாள் விழா
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் "கலைஞர் - இதய அரங்கம்" நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

போன் போட்ட கருணாநிதி
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "2007ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள கடைகளில் விலைவாசி அதிகமாக இருந்தது. நான் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது ஒருநாள் காலை 6.30 மணிக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி எனக்கு போன் செய்தார். நாளிதழ் பார்த்தியா என கேட்டார். அப்போது நான் 13வது பக்கம் பார்த்தேன் என சொன்னேன். என்ன செய்தி எனக் கேட்டார். துவரம் பருப்பு விலை ரூபாய் 65 ஆக அதிகரித்துவிட்டது என சொன்னேன்.

துவரம் பருப்பு விலை
உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அத்தியாவசிய தேவை என்பதை உணராமல், என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். நான் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். திரும்ப சென்னை வந்ததும் அதனை சரி செய்ய முயல்கிறேன் என்று சொன்னேன். அப்போது நான் துறை சார்ந்த செயலாளரிடம் கேட்டேன், ஒரு முதலமைச்சர் என்னிடம் பருப்பு விலை என்ன என்று கேட்கிறார், எத்தகைய முதல்வராக இருக்கிறார் பாருங்கள் என சொன்னேன்.

சென்னை வந்ததுமே
உடனடியாக சென்னை வந்ததும், துறை சார்ந்த செயலாளர் ஒருவரை கொண்டு நிதித்துறை அதிகாரி ஒருவரையும் அழைத்து, வருடத்திற்கு நாம் குறைந்த விலையில் பருப்பு வகைகளை கொடுத்தால் எவ்வளவு செலவாகும் என கேட்டறிந்த போது அவர்கள் 300 கோடி ரூபாய் ஆகும் என சொன்னார்கள். அதை கருணாநிதியிடம் தெரிவித்தேன்.

இன்றைய நிலைக்கு காரணம்
அப்போது கருணாநிதி என்னிடம், நீ ஒரு கிலோ பருப்புக்கு என்ன விலை நிர்ணயம் செய்து இருக்கிறாய் என்று கேட்டார். நான் 40 ரூபாய் எனச் சொன்னேன், அப்போது கருணாநிதி என்னிடம், "நான் சொல்கிறேன், 30 ரூபாய்க்கு அதனைக் கொடு" என்றார். 300 கோடி இழப்பு எனக்கு பெரும் விஷயம் அல்ல, எல்லோருடைய வீட்டிலும் துன்பம் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைத்தது தான், இன்று நியாயவிலைக் கடைகளில் பருப்பு வகைகள் குறைந்த விலைக்கு கிடைக்கக் காரணம்" எனத் தெரிவித்தார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications