காதில் கேட்க முடியல.. ஆபாசமாக பேசிய உயர் கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன்! எதிரிகளுக்கு எரிச்சலாம்
சென்னை: மாநில கல்வி உரிமையை பாதுகாப்பது தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற அமைச்சர் கோவி.செழியன், மேடையிலேயே ஆபாச வார்த்தைகள் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணி பிரிய வேண்டும் என்று அண்ணா அறிவாலய வாசலில் எதிரிகள் நாக்கை தொங்க போட்டு கொண்டு காத்திருப்பதாக கூறிய அவர், கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் இயக்கங்கள் விலக மாட்டேன் என்கிறார்கள் என்பதால் எதிரிகள் பொறாமையில் இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
சென்னையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாநில கல்வி உரிமையை பாதுகாப்பது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கு கூட்டத்தில் அமைச்சர்கள் கோவி.செழியன் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கருத்தரங்கில் அமைச்சர் கோவி.செழியன் கொஞ்சம் கூட முதிர்ச்சியின்றி ஆபாச வார்த்தைகள் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில் அமைச்சர் கோவி.செழியன் பேசுகையில், தேசிய அளவில் தமிழ்நாடு உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வியில் உயர்ந்து நிற்கிறது. அதற்கு திராவிடத் தலைவர்கள் மற்றும் பொதுவுடமை தலைவர்கள் போட்டு கொடுத்த அடித்தளம்தான் காரணம். தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் திமுக அல்லது அதிமுக இருக்கலாம். ஆனால் அதற்கு தளம் அமைத்து, இதனை செய்ய வேண்டும் என்று சொல்வது தான் பொதுவுடமை இயக்கம்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஒருமுறை, நான் பெரியாரையும் அண்ணாவையும் பார்க்காமல் இருந்திருந்தால், முழுநேர கம்யூனிஸ்ட்-வாதியாகவே வாழ்ந்திருப்பேன் என்றார். இதனைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும். அவரின் வழி வந்தவர்கள் நாங்கள். எங்களின் கரம் எப்போதும் தோழமைகளின் பொதுவுடமை இயக்கங்களை சார்ந்து இருக்கும். அதனால் எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை.
அதுதான் எதிரிகளுக்கு பொறாமை. அதுதானே எதிரிகளுக்கு ***எரிச்சல்.. விலக மாட்டேன் என்கிறார்களே.. பிரிய மாட்டேன் என்கிறார்களே.. அண்ணா அறிவாலயத்தின் வாசலில் நின்று நாக்கை தொங்க போட்டுக் கொண்டு காத்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோழர்கள் கரத்தை பிடித்து நாம் ஒன்றுபட்டால், இந்தியாவுக்கே வெளிச்சம் என்று கூறியுள்ளதாக தெரிவித்தார்.
இதில் கோவி.செழியன் ஆபாச வார்த்தைகளில் பேசிய வீடியோக்கள் ட்ரெண்டாகி வருகிறது. ஏற்கனவே சில வாரங்களுக்கு முன் மத்திய அரசை எதிர்க்கும் ஆண்மையுள்ள மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று பொதுக் கூட்ட மேடையில் அமைச்சர் கோவி.செழியன் பேசி இருந்தார். அப்போது குறுக்கிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பேச்சில் கூறிய ஆண்மை என்ற வார்த்தையை திருத்த விரும்புகிறேன். ஆண்மை என்றால் வீரம் அல்ல. ஆணுக்கு பெண் சமம் என்று குறிப்பிடுகிறேன் என்று கூறி இருந்தார்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications