ப்ளீஸ் அப்படி மட்டும் பண்ணாதீங்க.. அண்ணனாக கேட்கிறேன்.. சமுதாய வளைகாப்பில் அமைச்சர் மா.சு உருக்கம்
சென்னை: முழு வளர்ச்சி பெறும் முன்பு பிறந்த குழந்தைகளுக்குக் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், குறிப்பிட்ட தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என அறுவை சிகிச்சை மூலம் முன்கூட்டியே குழந்தையை எடுக்கக் கூடாது என்ற மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன், தென் சென்னை எம்பி தமிழ்ச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டார்.
இதில் ஆயிரம் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல், சேலையுடன் கூடிய சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். கரு உருவான நாள் முதல் குழந்தை 2 வயதை எட்டும் வரையிலான 1000 நாட்களில் மழலைகளுக்கு ஏற்ற முறையில் தாய்மார்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு முறைகள் குறித்து விளக்கும் விதமாக உணவு, தானிய, காய்கறி வகைகளும் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், "சைதாப்பேட்டையை விடச் சிறிய தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்குச் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. ஆனால் இங்கு 100 கர்ப்பிணிகளுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. காரணம் இங்கு மண்டபம் சிறியதாக உள்ளதாக என்று அமைச்சர் கீதா ஜீவனிடம் அதிகாரிகள் தவறான தகவலைச் சொல்லியுள்ளனர். இனி வரும் காலங்களில் அதிகாரிகள் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது.

மாற்றுத்திறனாளிகள் உரிமை
தமிழகத்தின் அனைத்து மருத்துவமனையிலும் தாய்ப்பால் வங்கியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினராக இருந்தபோது மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து சட்டமன்றத்தில் நான் பேசினேன். எனது மகனும் மாற்றுத்திறனாளியாக இருந்ததால் நானே விருப்பப்பட்டு மாற்றுத்திறனாளிகள் குறித்து சட்டமன்றத்தில் பேசினேன்.

அண்ணனாகக் கேட்டுக்கொள்கிறேன்
நினைத்த நேரத்தில்தான் குழந்தை பிறக்க வேண்டும் என நினைப்பது தவறு. விரும்புபவரின் பிறந்த தேதி, வழிபடும் தெய்வம், மூதாதையர் நினைவாக நினைத்த நேரத்தில் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற தவறான மனநிலைக்குப் பலரும் சென்றுவிட்டார்கள். முழு வளர்ச்சி பெறும் முன்பு குழந்தை பெற்றால் குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும். குழந்தையின் வளர்ச்சியைக் கெடுத்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, திடகாத்திரமான குழந்தையாக இருக்காது. இயற்கையாக, சுகப் பிரசவத்தில் குழந்தை பிறக்கும் வகையில் நீங்கள் இருக்க வேண்டும் என உங்களின் அண்ணனாக இங்குக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

தாய்ப்பால் மட்டும்
அதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், "நிதி பிரச்சனையால் பல வீடுகளில் வளைகாப்பு நடப்பதில்லை. தாய் மகிழ்ந்தால் குழந்தையும் மகிழும். கர்ப்பிணிகள் அணிந்துள்ள வளையல் சத்தத்தை வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை ரசித்துக் கேட்கும். புட்டிப்பால் குடிக்கும் பிள்ளைகள் நோஞ்சானாகவே இருக்கும். குழந்தைக்கு 6 மாதம் தாய்ப்பால் மட்டும் கொடுக்க வேண்டும்.

ஆண் பெண் வேறுபாடு கூடாது
6 வயதுக்குள் 90 சதவீத மூளை வளர்ச்சி எட்டும் எனக் கூறப்படுகிறது. ஆணோ பெண்ணோ, எத்தனையாவது குழந்தையானாலும் சமமாகக் கருதி வளர்க்க வேண்டும். குழந்தைகள் இடையே கல்வி , உணவில் பாரபட்சம் காட்டக்கூடாது. பெண் பிள்ளையை மதிக்க ஆண் பிள்ளைக்கு கற்றுத் தர வேண்டும். கடவுள் கொடுத்த நேரத்தில் குழந்தை பிறந்தால்தான் ஜாதகம் சரியாக இருக்கும், நாள் நட்சத்திரம் பார்த்து முன் கூட்டியே அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர்க்க வேண்டும்" என்று கூறினார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications