வெளிநாடு சென்று நீண்ட நாட்களாக திரும்பிவராத அரசு மருத்துவர்கள்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் வார்னிங்!
சென்னை: வெளிநாடுகளுக்குச் சென்று நீண்ட நாட்களாக திரும்பாத அரசு மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தேவையில்லாமல் அரசு மருத்துவர்கள் வெளிநாடு செல்லக்கூடாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த சில வாரங்களாக பல்வேறு அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அண்மையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்தார். இந்நிலையில் சென்னை அரசு ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான உணர், செயல்திறன் பூங்காவை திறந்து வைத்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று உணர் திறன் பூங்கா 30 லட்சம் மதிப்பீட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பல நவீன வசதிகள் இந்த பூங்காவில் உள்ளது. ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர்.
நீரழிவு நோயாளிகள் காலையில் பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்த பின் முடிவு வரும் வரை காத்திருக்க ஐந்து லட்சம் மதிப்பீட்டில் அமர்வு கூடம் திறக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு 12 ஆயிரம் பேர் வருகிறார்கள். கூடுதல் வசதிகள் மேற்கொள்ள 112 கோடி மதிப்பீட்டில் கிரிட்டிக்கல் கேர் கட்டிடம் கட்டப்படவுள்ளது. தரை தளம் மற்றும் ஆறு தளம் கொண்டதாகவும் 300 படுக்கை வசதி கொண்டதாக அமைய உள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கொரோனா காலத்தில் மருத்துவத்துறையில் பணியாற்றியவர்களை பணியமர்த்திய ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். கிட்டத்தட்ட 4 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் 3000 காலி பணியிடங்கள் ஒரு மாதத்துக்குள் நிரப்பப்படும். முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்குவார்.
அரசு அனுமதி இல்லாமல் ஒரு அரசு மருத்துவர்கள் கூட வெளிநாடு செல்ல முடியாது. அப்படி அனுமதி பெற்று வெளிநாடு சென்று அனுமதிக்கப்பட்ட காலத்தை தாண்டி நீண்ட நாட்களாக திரும்பாத மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தேவையில்லாமல் அரசு மருத்துவர்கள் வெளிநாடு செல்லக்கூடாது. அரசு மருத்துவர்கள் வெளிநாட்டில் இருப்பவர்களின் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
அண்மையில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சரியான நேரத்தில் பணியில் இல்லாத மருத்துவர், மருந்தாளுநர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள சுகாதார பணிகள் துணை இயக்குநருக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications