வேளாண் பட்ஜெட்.. நேற்று தவிழும் குழந்தை, இன்று நடக்கும் குழந்தை, நாளை ஓடும் குழந்தை.. அமைச்சர் பன்ச்
சென்னை: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அனைவரையும் கவரும் வகையில் தனது உரையைத் தொடங்கினார்,
Recommended Video
தமிழ்நாட்டில் 2022-23 ஆண்டிற்கான பட்ஜெட்டை நேற்றைய தினம் அமைச்சர் பிடிஆர் சட்டசபையில் தாக்கல் செய்தார்.
ஜெயக்குமார் கைது, வேலுமணி ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையில், அமைச்சர் பிடிஆர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்

வேளாண் பட்ஜெட்
அதில் பெரியார் சிந்தனைகள் 21 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் கல்லூரி படிப்பை உறுதி செய்ய நிதியுதவி உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் விவசாயத்துக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், 2022-23 ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்,

பண்டை தமிழ் நாகரீகம்
அப்போது பேசிய அவர், "விவசாயிகள் இடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நிதிநிலை அறிக்கை உள்ளது.
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
என்றார் திருவள்ளுவர். அதேபோல பண்டை தமிழ் இலக்கியங்களில் வேளாண் குறித்தும் நீர் மேலாண்மை குறித்தும் எண்ணற்ற கருத்துகள் உள்ளன. வேளாண்மையை மனதில் கொண்டு தான் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பிரித்து வாழ்க்கை நெறிமுறைகளை வகுத்துக் கொண்டனர்.

தவிழும் குழந்தை
கடந்த ஆண்டு வேளாண் பட்ஜெட் தவழும் குழந்தையாக இருந்தது.. இந்த அந்த ஆண்டு வேளாண் பட்ஜெட் நடந்து செல்லும் குழந்தையாக இருக்கும். அடுத்த ஆண்டுகளில் வேளாண் பட்ஜெட் ஓடும் குழந்தையாக உயர இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டை செயல்படுத்த வெறும் 6 மாதங்கள் மட்டுமே இருந்தன. அதிலும் கடந்த ஆண்டு ஓமிக்ரான் கொரோனா காரணமாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது அனைவருக்கும் தெரியும்.

86இல் 80 திட்டங்கள்
அப்படி இருக்கும் போதும் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 86 திட்டங்களில் 80 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மீதும் உள்ள 6 திட்டங்களும் கூட நீண்ட கால திட்டங்கள் என்பதால் திட்ட மதிப்பீடு, வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு திட்டங்கள் மெல்ல வேரூன்றிய நிலையில், இந்த ஆண்டு அதைத் தழைத்து வளர வைக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். வரும் ஆண்டுகளைக் கருத்தில் கொண்டும் பல திட்டங்கள் இந்த ஆண்டு திட்டத்தில் இடம்பெறும்" என்றார்.












Click it and Unblock the Notifications