Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"விவசாயம் பற்றி தெரியாமல் அறிக்கை விடுகிறார்".. விஜய் மீது அமைச்சர் MRK பன்னீர்செல்வம் தாக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாயத்தையும், விவசாயிகளையும் பற்றி தெரியாத புதிய கட்சி தலைவர்கள், அது குறித்து அறிக்கை விட்டு வருகின்றனர் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். நெல் கொள்முதல் தொடர்பாக தவெக தலைவர் விஜய் திமுக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் அதனை அமைச்சர் விமர்சித்துள்ளார்.

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடலூரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறுகையில், "கடலூர், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் நெல் அறுவடை முடிந்துவிட்டது. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்னும் சில நாட்களில் அறுவடை முடிந்துவிடும். கனமழையால் நெல்மணிகளும், விவசாயிகளும் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசும், முதலமைச்சரும் துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

MRK Panneerselvam dmk vijay farmers

விவசாயத்தையும், விவசாயிகளையும் பற்றி தெரியாத புதிய கட்சி தலைவர்கள், அது குறித்து அறிக்கை விட்டு வருகின்றனர். அவர்கள், பச்சை துண்டுகளை கட்டிக்கொண்டு தாங்களும் விவசாயிகள் என கூறுகின்றனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட்டணியில் சீட் பெறுவதற்காக திமுக அரசை விமர்சனம் செய்து வருகிறார்.

தற்போது அறிக்கை விடும் தவெக தலைவர் விஜய், கொரோனா காலத்தில் எங்கு இருந்தார்? கொரோனா காலத்தில் தி.மு.கவினர் வீடு வீடாகச் சென்று காய்கறி, மளிகைப் பொருட்கள் வழங்கினர். கஷ்டம் வரும்போது யார் உதவி செய்கிறார்களோ அவர்களை தான் மக்கள் அடையாளம் காண்பார்கள்.
விவசாயிகளும், விவசாயமும் தற்போது பேசுபொருள் ஆகிவிட்டது. அந்த அளவுக்கு விவசாயத்திற்கான விழிப்புணர்வை தமிழக முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ளார்." எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு, ஒரு மாத காலமாக எந்தவித அரசியல் நகர்வுகளிலும் ஈடுபடாமல் இருந்த விஜய், அண்மையில் நெல் கொள்முதல் விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டார். விஜய் வெளியிட்ட அறிக்கையில், "தொடர் மழையால், விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்ட நெல்மணிகள் முதல்முறை வீணான போதே துரிதமாகச் செயல்பட்டு மீதமுள்ள நெல்மணிகளைப் தமிழக அரசு பாதுகாத்திருக்க வேண்டாமா?

விவசாயிகள் மீது உண்மையாகவே அக்கறை கொண்டிருக்கும் அரசு என்றால் அது அவர்களின் வாழ்வாதாரத்தைக் காத்து, பொருளாதார ரீதியில் அவர்கள் உயர்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசாக இருக்க வேண்டும். மாறாக, ஏழை விவசாயிகள் தங்களின் கடின உழைப்பின் வாயிலாக விளைவித்தவற்றை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் அவற்றை மழையில் நனையவிட்டு வீணாக்கி, ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஒரு அரசை என்னவென்று சொல்வது?

விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்று, பணத்தைக் கையில் பார்த்துவிடாமல் தடுப்பதே ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் நோக்கமாக இருந்து வருகிறதா என்கிற ஐயம் ஏற்படுகிறது. இது இந்த ஆண்டு மட்டுமில்லை. ஒவ்வோர் ஆண்டுமே இதுதான் நிலை என்கிறபோது வேதனையாகவும் உள்ளது. வெற்று விளம்பரத்திற்காக நானும் டெல்டாக்காரன்தான் எனப் பெருமை பேசிவருகிறது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.

விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகள் இந்த வெற்று விளம்பர திமுக அரசின் அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகி, மூட்டையிலேயே முளைத்துள்ளன. அதைப் போல், தமிழ் நாட்டு மக்கள் மனங்களில் முளைத்து வளர்ந்து செழித்து நிற்கும் அரசு மீதான எதிர்ப்பு இன்னும் வலுவாகி, வெகுஜன மக்கள் விரோத திமுக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி" எனத் தெரிவித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+