டிபேட் கிபேட்டுன்னு நீங்களா சொல்லாதீங்க! சீரியஸ் பிரஸ்மீட்டில் சிரிப்பலையை உருவாக்கிய அமைச்சர் நேரு!
சென்னை: சென்னை மாநகராட்சியில் அதிகாரிகளுக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே ஈகோ யுத்தம் நடப்பது போல் டிபேட் போகிறதே என்ற செய்தியாளர் கேள்விக்கு, டிபேட் கிபேட்டுன்னு நீங்களா சொல்லாதீங்க என தனக்கே உரிய பாணியில் பதிலளித்து சீரியஸ் பிரஸ்மீட்டில் சிரிப்பலையை உருவாக்கிவிட்டார் அமைச்சர் நேரு.
அமைச்சர் கே.என்.நேருவை பொறுத்தவரை எப்பேர்பட்ட எடக்குமடக்கான கேள்விகளையும் எளிதாக எதிர்கொள்ளக்கூடியவர். ஆனால் சாதுர்யமாக பதிலளித்து சர்ச்சைகளில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளக் கூடியவர். நேற்று கூட கோவையில் இந்தியாவின் பெயர் பாரத் என்று மாற்றப்படுவதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, இதையெல்லாம் பெரியவங்க கிட்ட கேளுங்க எனக் கூறி ஈசியாக நழுவிக் கொண்டார்.

அதேபோல் செய்தியாளர்களிடம் பேசும் போது உரிமையாக பேசி செய்தியாளர்கள் சந்திப்பையே கலகலப்பாக வைத்துக் கொள்வார். அந்த வகையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழைக்காலம் முடியும் வரை சாலைகளில் எங்குமே பள்ளம் தோண்டக்கூடாது என அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
சென்னையில் மழைநீர் வடிகால் பணியை வேகமாக முடிக்கத் தான் பார்க்கிறோமே தவிர பொய் சொல்லி இழுத்தடிக்க விரும்பவில்லை என்றும் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் அந்தப் பணிகள் முடிக்கப்படும் எனவும் கூறினார். மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தங்கள் பேச்சை கேட்பதில்லை என்ற கவுன்சிலர்களின் குற்றச்சாட்டு குறித்து தான் ஆய்வுக்கூட்டம் நடத்தியிருப்பதாக தெரிவித்தார்.
மேலும், அதிகாரிகளுக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே ஈகோ யுத்தம் நடப்பது போல் டிபேட் போகிறதே என்ற செய்தியாளர் கேள்விக்கு, டிபேட் கிபேட்டுன்னு நீங்களா சொல்லாதீங்க என கேள்வியை முடிப்பதற்குள் பதிலளித்து சிக்ஸர் விளாசினார்.












Click it and Unblock the Notifications