யூகங்களுக்கு முற்றுப்புள்ளி! எந்த விரிசலும் இல்லை! சபரீசனுடன் ஒரே நிகழ்வில் ஒன்றாக அமைச்சர் பிடிஆர்
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுடன் அமைச்சர் பிடிஆர் ஒன்றாக ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொண்டது அவரது எதிர் தரப்பினருக்கு ஷாக்காக அமைந்துள்ளது.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்த சர்ச்சை ஆடியோவை தொடர்ந்து அவரை முதல்வர் தரப்பு ஒதுக்கி வைத்துவிட்டதாகவும் குறிப்பாக சபரீசன், உதயநிதி ஸ்டாலின் போன்றோர் பேசுவதே இல்லை எனவும் ஒரு தகவல் வட்டமடித்தன. மேலும், முதல்வர் தரப்பிடம் பிடிஆரின் செல்வாக்கு குறைந்துவிட்டதாகவும் கூறப்பட்டன.

இதனை தவிடுபொடியாக்கும் வகையில் சென்னையில் நேற்றைய தினம் ஒரு நிகழ்வு நடந்தது. முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் மறைவைத் தொடர்ந்து அவரது இல்லத்துக்கு சென்று குடும்பத்தினரிடம் துக்கம் விசாரிக்கச் சென்றார் முதல்வர் ஸ்டாலின்.
அவருடன் ஆ.ராசா, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சபரீசன் உள்ளீட்டோரும் உடன் சென்றிருந்தனர். அப்போது சபரீசன் அருகில் தான் அமைச்சர் பிடிஆர் ஒன்றாக கேசுவலாக நின்றுக் கொண்டிருந்தார். இருவரும் எப்போதும் போல் பேசிக்கொள்ளவும் செய்துள்ளனர்.
இதன் மூலம் தங்களுக்குள் எந்த விரிசலும் இல்லை என்பதை அவர்கள் உணர்த்தியுள்ளனர். அமைச்சர் பிடிஆர் சொந்தப்பணிகள் காரணமாக வெளிநாடு சென்றிருந்த நிலையில், கோபித்துக்கொண்டு தான் அவர் வெளிநாடு சென்றுவிட்டதை போல ஒரு தோற்றத்தை உருவாக்க அவரது எதிர்தரப்பினர் முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே தன்னை பற்றிய யூகங்களுக்கு முற்றுப்புள்ள வைக்கும் வகையில் மீண்டும் தனது துறை சார்ந்த பணிகளில் பரபரப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டார் அமைச்சர் பிடிஆர். சபரீசனுடன் ஒன்றாக ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை போல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடனும் ஒன்றாக ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications