Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆகஸ்ட் 16ல் தொடங்கும் பொறியியல் கலந்தாய்வு - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 16 ஆம் தேதி தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வருகிற 23-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மற்றும் விண்ணப்பிக்கக்கூடிய நடைமுறைகள் குறித்து குறித்து அரசு மற்றும் தனியார் கல்லூரி பிரதிநிதிகள் மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

எப்போது விண்ணப்பிக்கலாம்?

எப்போது விண்ணப்பிக்கலாம்?

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் காலியாவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை வரும் பொறியியல் கலந்தாய்வில் மேற்கொள்ள உள்ளோம். பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வருகிற 20 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் ஜூலை 19 வரை மாணவர்கள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்காக மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மற்றும் 110 பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

 கலந்தாய்வு தேதி

கலந்தாய்வு தேதி

ஜூலை 20 ஆம் தேதி முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும். அதனை தொடர்ந்து ஆகஸ்டு 8 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். ஆகஸ்டு 16 ஆம் தேதி பொறியியல் கலந்தாய்வு தொடங்கி 19 ஆம் தேதி வரை முதல் 4 நாட்கள் மாற்றுத்திறனாளிகள்,
விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு நடைபெற உள்ளது.

எவ்வளவு கட்டணம்?

எவ்வளவு கட்டணம்?

தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 22 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 10 ஆம் தேதி வரை நடைபெறும். பொறியியல் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அதே கட்டணம் வசூலிக்கப்படும். கலந்தாய்வின் மூலம் கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்யக் கூடிய மாணவர்கள் ஒரு வார காலத்திற்குள் கல்லூரிக் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் என தெரிவித்தார்

 எத்தனை மாணவர்கள்?

எத்தனை மாணவர்கள்?

முதல் கட்ட கலந்தாய்வில் 15 ஆயிரம் பேரும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு
15 ஆயிரம் பேரும் என மொத்தம் நான்கு கட்டங்களாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் இணையதளம் மூலம் வருகிற இருவத்தி ஏழாம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 25-07-2022 தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவித்தார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+