Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொன்முடி மகிழ்ச்சியாக இருக்கார்.. காரணம்.. பிரஸ் மீட்டில் போட்டு உடைத்த டிகேஎஸ் இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமலாகக்த்துறை விசாரணையை எதிர்கொண்டு இருக்கும் அமைச்சர் பொன்முடியை இன்று அவரது இல்லத்தில் சென்று சந்தித்த பிறகு டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பொன்முடிக்கு அச்சம் இல்லை என்றும் அவர் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் டிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் நேற்று விடிய விடிய அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக விமர்சித்து வருகிறது. அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொண்டு இருக்கும் பொன்முடியை மூத்த அமைச்சர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

 MInister Ponmudi not afraid of ED questioning: T. K. S. Elangovan

திமுகவின் உயர் மட்ட நிர்வாகிகளும் பொன்முடியை சந்தித்து பேசினர். அந்த வகையில் திமுகவின் டிகேஎஸ் இளங்கோவனும் பொன்முடியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:- பாஜக தனது கூட்டணியில் 37-வது கட்சியாக அமலாகக்துறையையும் சேர்த்து வெற்றி பெறலாம் என்று எண்ணத்தில் இதை செய்கிறார்கள்.

பொன்முடிக்கு எதிராக அமலாக்கத்துறையின் நடவடிக்கை முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கை. எதிர்க்கட்சிகளின் கூட்டணியை பார்த்து பாஜக எந்த அளவுக்கு அச்சப்படுகிறது என்பதை இது காட்டுகிறது. பொன்முடி நன்றாக இருக்கிறார். அமலாகக்துறை விசாரணை குறித்து சிறிதும் கவலைப்படவில்லை. காரணம் அவருக்கு தெரியும்.. பொன்முடி அச்சத்தில் இல்லை.

 MInister Ponmudi not afraid of ED questioning: T. K. S. Elangovan

மகிழ்ச்சியாக இருக்கிறார். விசாரணைக்கு ஆஜராக பொன்முடி தயராக இருக்கிறார். பொன்முடி மடியில் கனம் இல்லை அதனால் அவருக்கு வழியில் பயம் இல்லை. அமலாக்கத்துறை அடுத்தகட்டமாக எந்த தவறான முடிவை மேற்கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் மற்றவை (நீதிமன்றம் செல்வது) குறித்து முடிவு எடுக்க முடியும். உலகத்திலேயெ மிகப்பெரிய ஊழல் கட்சி பாஜகதான்.

ஊழலில் மிக உயரத்தை பாஜக தொட்டு விட்டது. களங்கம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக திட்டமிட்டு இதுபோல எதிர்க்கட்சிகளை பழிவாங்குகிறது. செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்யலாமா வேண்டாமா என்று கேள்விக்குதான் நீதிமன்றம் பதில் சொல்லியிருக்கிறது. செந்தில் பாலாஜி மீது தவறு இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் சொல்லவில்லை. எனவே அது வேறு இது வேறு... இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+