எங்க ஊர்க்காரர்தான்! கலைஞர் நூற்றாண்டு விழாவில் விஞ்ஞானி வீரமுத்துவேலை புகழ்ந்த அமைச்சர் பொன்முடி
சென்னை: நிலவின் தென் துருவ பகுதியில் இஸ்ரோவின் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் மற்றும், பிரக்யான் ரோவர் ஆகியவை வெற்றிகரமாக தரையிறங்கி வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது. இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, இந்த வெற்றிக்கு சொந்தக்காரர் எங்க ஊர்க்காரர்தான் என்று விஞ்ஞானி வீரமுத்துவேலை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
விண்வெளி அறிவியலின் முன்னோடியாக இருந்த ரஷ்யாவே நிலவின் தென் துருவ பகுதியில் விண்கலத்தை தரையிறக்குவதில் தோல்வியடைந்த நிலையில், இந்தியா இதனை வெற்றிகரமாக சாதித்து காட்டியிருக்கிறது. இந்த வெற்றியை நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

திமுகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் 'கலைஞர் நூற்றாண்டு' விழா கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் இந்த நூற்றாண்டு விழா கொண்டாட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விழா அவரை பெருமைப்படுத்தும் விழாவாக மட்டும் சுருங்கிவிடாமல், அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனிற்காக அறிவித்து, நிறைவேற்றிய திட்டங்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையிலும், அனைத்துத் தரப்பினரும் பங்கெடுக்கும் வகையிலும் விழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிய அமைச்சர் பொன்முடியின் பேச்சு பெரும் கவனம் ஈர்த்திருக்கிறது. அவர் பேசியதாவது, "இன்னைக்கு நடக்குற செஸ் போட்டியில ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு இந்தியர் ஃபைனல் வரை வந்திருக்காரு. விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் விளையாட்டு என்றால் என்ன என்று தெரியும் அளவுக்கு அந்த துறை வளர்ந்திருக்கிறது.
இந்த வளர்ச்சி சிந்தனை கலைஞர், தளபதி அவருக்கு அடுத்து உதயா என வாழையடி வாழையாக வந்திருக்கிறது. உதயா எல்லோருக்கும் வாய்ப்புகளை சமமாக உருவாக்கி இந்த விளையாட்டுகளை வளர்த்துக்கொண்டிருக்கிறார். இதனால் சர்வதேச போட்டியில் கலந்துகொள்ளும் அளவுக்கு ஒருவர் வளர்ந்திருக்கிறார். இது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை, திராவிட இயக்கத்திற்கு கிடைத்த பெருமை. திராவிட கொள்கையும் இதான்.
கலைஞரின் நூற்றாண்டு விழாவில் நமக்கெல்லாம் பெரிய பெருமை கிடைத்திருக்கிறது. சாதித்து காட்டிய சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநராக இருப்பவர் எங்க ஊர்க்காரர், விழுப்புரத்துக்காரர், தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று சொல்லுவதில் எனக்கு பெருமை. கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த நாளிலே தமிழகத்தை சேர்ந்த ஒருவர், சந்திரயானை இயக்கும் திட்டத்தின் தலைவராக உருவாகி இருக்கிறார் என்று சொன்னால் அதுதான் நமக்கு பெருமை.
அவரது தந்தை ரயில்வேயில் பணியாற்றி தொமுச என்று சொல்லக்கூடிய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் திருச்சி மண்டல பொறுப்பாளராக பொறுப்பேற்றிருந்தவர், கழகத்தையும் சார்ந்தவர் என்பது தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் பெருமை" என்று பேசியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications