ஜாலியாக பேசக் கூடிய ராஜேந்திர பாலாஜியே கோபமாகிட்டாரே.. கமல் பேச்சால் ஏற்பட்ட கசமுசா!
கமல்ஹாசனை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக பேசியிருக்கிறார்
Recommended Video
சென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு பெரும் சலசலப்புகளையும் அதிர்வுகளையும், அரசியல் எங்கு போய்க் கொண்டுள்ளது என்ற அச்சத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
கமல்ஹாசன் பேசிய சர்ச்சைக் கருத்தைக் கண்டித்துப் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசியிருந்தார். இது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
சாதாரணமானவர்கள் பேசுவதையே சட்டம் கண்டிக்கிறது, தடுக்கிறது, தண்டனையும் கொடுக்கிறது. அப்படி இருக்கையில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவர், இப்படி சர்வ சாதாரணமாக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியிருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது. ஜெயலலிதா இருந்தவரை இப்படியெல்லாம் அதிமுகவினர் பேசியதே இல்லையே என்ற ஆதங்கத்தையும் ஏற்படுத்துகிறது.

பெரியார் சிலை
இந்த நிலையில் நாம் பல முன் சம்பவங்களை நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. முன்பு பெரியாருக்கு எதிராக பாஜக தலைவர்கள் சிலர் கடுமையாக கொந்தளித்து கருத்துக்களைக் கொட்டி வந்தனர். பெரியார் சிலைகள் மீது தாக்குதல் எல்லாம் நடத்தப்பட்டது. பெரியார் சிலையின் தலையை வெட்டுவோம் என்றெல்லாம் சிலர் ஆவேசமாக முழங்கினர்.

ஆவேச பதிலடி
அதற்கு பதிலடி கொடுத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூட, அப்படி செய்தால் நான் அவர்களது கையை வெட்டுவேன் என்று கூறியிருந்தார். அதுபோன்ற சம்பவத்தின்போதெல்லாம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ அல்லது பிற அமைச்சர்களோ இந்த அளவுக்கு ஆவேசமான பதிலடியைக் கொடுத்ததில்லை.

தீவிரவாதிகள்
அதேபோல இஸ்லாமிய தீவிரவாதிகள், முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்பது போல சில பாஜக தலைவர்கள் பகிரங்கமாக டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவு செய்தபோதும் அதுதொடர்பாக அதிமுக அமைச்சர்கள் யாரும் கருத்து கூறியதில்லை. ஏன் கண்டனம் கூட தெரிவித்ததில்லை. அதெப்படி இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று கூறலாம் என்று யாரும் கண்டிக்கவும் இல்லை. ஒரு வழக்கு கூட பதிவானதும் இல்லை.

எதார்த்த பேச்சு
இந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆவேசம் அனைவரையும் பதற வைத்துள்ளது. உண்மையில் ராஜேந்திர பாலாஜி நகைச்சுவை உணர்வு மிக்கவர். மிகவும் ஜாலியாக, எதார்த்தமாக பேசக் கூடியவர். அவரது பேச்சுக்கென்று தனியாக ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. அமைச்சர் செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் போன்றோர் போலவே இவரும் ஜாலியாக, நகைச்சுவையாக பேசக் கூடியவர். அப்படிப்பட்டவர் இப்படி நாக்கை வெட்டுவேன் என்று வாயை விட்டது அதிர வைத்துள்ளது.

பண்பாடு, அடக்கம்
கோபம் இருக்கலாம் ஆனால் கொலை வெறி இருக்கக் கூடாது என்பார்கள். தலைவர்களுக்கு புரிந்தால் சரி.. காரணம், தலைவர்கள் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழி என்பார்கள். எனவே தலைவர்கள் நாகரீகமாக, பண்பாட்டுடன், அடக்கமாக நடந்து கொள்வதுதான் அவர்கள் வளர்ந்த இயக்கத்திற்கும், அவர்களை பின்பற்றும் தொண்டர்களுக்கும் நலம் பயக்கும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications