உதயநிதி ஸ்டாலினுக்கு இப்படி ஒரு பாராட்டு.. அதுவும் சட்டசபையில்.. அதிர வைத்த அமைச்சர் நாசர்!
சென்னை : கல்லுக்கும் உங்களுக்கும் என்ன உறவோ தெரியவில்லை. உங்களின் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி புரட்டி போட்டது தமிழ் திரை உலகை.. ஒரே ஒரு செங்கல் புரட்டி போட்டது ஆட்சி அதிகாரத்தை.. ! முன்பெல்லாம் சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு போனால் தோனி வந்தால் தான் கூட்டம் வரும். இப்ப நம்ம அருமை சகோதரர் உதயநிதி வந்தாலே கூட்டம் வருகிறது என சட்டசபையில் வெகுவாக பாராட்டி உள்ளார் அமைச்சர் நாசர்.
Recommended Video
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சனிக்கிழமை அன்று வோண்மை, கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், அறிவிப்புகளை வெளியிடும் முன்பு உதயநிதி ஸ்டாலினை வெகுவாக பாராட்டினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிலப்பதிகாரம்
அமைச்சர் நாசர் சட்டசபையில் உதயநிதியை பாராட்டி பேசியதாவது: சங்க தமிழை பழித்து, இடக்கு செய்த கனகன் மற்றும் விஜயன் தலையில் கல்லை சுமந்து சேர நாட்டு கண்ணகிக்கு கோட்டம் காட்டியவன் சேர நாட்டுமன்னன் செங்குட்டுவன்... அது சிலப்பதிகாரம்.. எங்கள் இணைதளபதியே.. உதயநிதியே நீ தூக்கிக்காட்டியதொரு செங்கலில் புனித ஜார்ஜ் கோட்டையே களங்க கோட்டையானது. இது செங்கலதிகாரம்..

உதயநிதி
கல்லுக்கும் உங்களுக்கும் என்ன உறவோ தெரியவில்லை. உங்களின் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி புரட்டி போட்டது தமிழ் திரை உலகை.. ஒரே ஒரு செங்கல் புரட்டி போட்டது ஆட்சி அதிகாரத்தை.. ! முன்பெல்லாம் சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு போனால் தோனி வந்தால் தான் கூட்டம் வரும். இப்ப நம்ம அருமை சகோதரர் உதயநிதி வந்தாலே கூட்டம் வருகிறது. அந்த வரலாற்றையும் மாற்றிவிட்டார் உதயநிதி என்று அமைச்சர் நாசர் பாராட்டினார். அத்துடன் அமைச்சர் துரைமுருகனையும் வெகுவாக வாழ்த்தினார் அமைச்சர் நாசர். தனக்கு வாக்களித்த மக்களுக்கும்,தோழமை கட்சிகளுக்கும் நன்றி கூறி சட்டசபையில் நேற்று மானிய கோரிக்கை விவாதத்தில் நாசர் பேசினார்.

கட்டளை
முன்னதாக சட்டப்பேரவையில், நீதிமன்ற கட்டணம் தொடர்பான திருத்தச் சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று அறிமுகம் செய்து நேற்று முன்தினம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு புகழாரம் சூட்டினார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "தி.மு.க உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு கண்டிப்பான வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் உரைகளின்போதும், பதில் அளிக்கும்போதும் உங்களை உருவாக்கிய, ஆளாக்கிய, நம் முன்னோடிகளை குறிப்பிட்டு வணக்கம் செலுத்திப் பேசுவது முறையாக இருக்கும். ஆனால், கேள்வி நேரத்துக்கும், சட்ட முன்வடிவை அறிமுகம் செய்வதற்கும் அதை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் நேரத்தின் அருமையைப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் நான் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இங்கு இருக்கும் அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இது என் கட்டளை." என்றார்.

முதல்வர் எச்சரிக்கை
இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) மானியக் கோரிக்கை விவாதத்தின்போது தி.மு.க எம்.எல்.ஏ ஐயப்பன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், "ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் நேரத்தின் அருமை கருதி என்னைப் புகழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும். மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தன்னைப் புகழ்ந்து பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

உதயநிதிக்கு பாராட்டு
நேற்றே அவை நேரத்தை வீண்டிக்க வேண்டாம் என எச்சரித்தேன். எதையும் அளவோடு வைத்துக் கொள்ளுங்கள்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். இந்த சூழலில் தான் அமைச்சர் நாசர் , உதயநிதி ஸ்டாலினை பாராட்டி சட்டசபையில் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.
-
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications