அறநிலையத் துறையை கலைத்துவிட்டால் கோயில்களை பராமரிப்பது யார்.. அண்ணாமலைக்கு அமைச்சர் கேள்வி
சென்னை: அறநிலையத் துறையை கலைத்து விட்டால் கோயில்களை பராமரிப்பது யார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சுவாமி திருவீதி உலா வருவதற்காக 19 கிலோ எடையில் ரூ 15 லட்சம் மதிப்பிலான வெள்ளி பல்லக்கு வழங்கும் நிகழ்ச்சி பார்த்தசாரதி திருக்கோயிலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பல்லக்கை பெற்றுக் கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் பல்லக்கை சுமந்து வந்தனர்.

திமுக ஆட்சி
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, திமுக ஆட்சிக்கு வந்த பின் திருடப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட 282 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. அவற்றை மீட்டது தமிழ்நாடு காவல் துறை. மேலும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள் திருப்பணிக்கு ரூ 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பகுதி நேர பணியாளர்கள்
பகுதி நேர பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, அன்னதான திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டதாக பட்டியலிட்டார். அறநிலையத் துறையில் முறைகேடு நடப்பதாகவும் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து முதல் கையெழுத்திடப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்வி எழுந்தது.

அறநிலையத் துறை
அவர் கூறுகையில் அறநிலையத் துறையை கலைத்து விட்டால் கோயில்களை பராமரிப்பது யார் என கேள்வி எழுப்பினார். குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளை கூறினால் பதிலளிக்கப்படும். பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க முடியாது. ஆதாரமற்ற பேச்சுக்களை பற்றி கவலைப்படவில்லை. உரிய சான்றுகளுடன் குற்றம்சாட்டினால் அதற்குரிய விளக்கங்களை அளிக்கவும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருக்கிறோம்.

அறநிலையத் துறை வாகனம்
அறநிலையத் துறை வாகனத்தை சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தவில்லை. இறையன்பர்களும் தெய்வங்களும் மகிழ்வுடன் இருக்கும் இந்த ஆட்சியை பற்றி குறை கூறுபவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார் அமைச்சர் சேகர் பாபு.
-
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!










Click it and Unblock the Notifications