அடேங்கப்பா சென்னை மாநகரத்துக்கு இத்தனை திட்டங்களா? சட்டசபையில் சேகர்பாபு சரமாரி அறிவிப்புகள்!
சென்னை: சென்னை மாநகரில் சேத்துப்பட்டு பசுமை பூங்கா, சுரங்கப் பாதைகள் மேம்பாடு, கால்பந்து மைதானம் என பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துறை அமைச்சர் சேகர் பாபு.
தமிழ்நாடு சட்டசபையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்;

சென்னைப் பெருநகர் பகுதியில் அமைந்துள்ள சேத்துப்பட்டு பசுமை பூங்கா (Eco Park) ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
ரூ.8 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் பகுதியில் அமைந்துள்ள 10 சுரங்கப் பாதைகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
ரூ.10 கோடி மதிப்பீட்டில் திரு.வி.க நகர் கொன்னூர் நெடுஞ்சாலையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய சமுதாயக்கூடம் அமைக்கப்படும்.

ரூ.52 கோடி மதிப்பீட்டில் சமுதாயக் கூடங்கள் மேம்படுத்தப்படும்.
ரூ.8 கோடி மதிப்பீட்டில் ஆர்.கே. நகர் இளையா தெருவில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டுத்திடல் அமைக்கப்படும்.
ரூ.2 கோடி மதிப்பீட்டில் சிறிய ரக கால்பந்து மைதானம், சேத்துப்பட்டு அப்பாசாமி தெருவில் அமைக்கப்படும்.

ரூ.10 கோடி மதிப்பீட்டில் இராயபுரம் மூலகொத்தளத்தில் 0.35 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
சேப்பாக்கம் பகுதியில் மக்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்க ரூ.10 கோடி மதிப்பீட்டில் இரத்த சுத்திகரிப்பு மையம் (Dialysis Centre) அமைக்கப்படும்
ரூ.60 கோடி மதிப்பீட்டில் ஆறு பேருந்து நிலையங்கள் தலா ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்.
ரூ. 5 கோடி மதிப்பீட்டில் தாம்பரத்தில் DR.A.P.J.அப்துல் கலாம் பூங்கா மற்றும் நல்ல தண்ணீர் குளம் மேம்படுத்தப்படும்.

ரூ.6 கோடி மதிப்பீட்டில் அம்பத்தூர் பானு நகரில் நவீன வசதிகள் கொண்ட விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.
போரூர் ஏரி, பெருங்குடி ஏரி உள்ளிட்டவை தலா ரூ.33 கோடியில் மேம்படுத்தப்படும்.












Click it and Unblock the Notifications