பாஜக திட்டங்கள் தமிழ்நாட்டில் எடுபடாது - நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
சென்னை: திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றினால் என்ன தவறு என தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு, "வடமாநிலங்களில் வேண்டுமானால் பா.ஜ.கவினர் நினைத்த செயல் நடைபெறலாம். தமிழ்நாட்டில் நடக்காது" என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
"சாதி, மத, இன மொழிகளுக்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டில் பா.ஜ.க. திட்டங்கள் எல்லாம் எடுபடாது. சனாதனம் மட்டுமல்ல எந்தவொரு கொள்கையும் மக்களை பிளவுபடுத்த கூடாது. பாஜகவிடம் முழுவதும் அடிமைபடுத்தப்பட்ட அ.தி.மு.க. என்ற தேர் 2026-ல் நிலைக்கு வராது" எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் வழக்கு விவகாரம் குறித்து நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "அயோத்தி இங்கிலாந்திலோ ஐரோப்பாவிலோ இல்லை, இந்தியாவில்தான் உள்ளது. எனவே தமிழ்நாடு அயோத்தியைப் போல மாறுவதில் எந்தத் தவறும் இல்லை" என்று தெரிவித்தார்.
மேலும் நயினார் நாகேந்திரன் பேசுகையில், "தீபம் ஏற்றியதில் எந்த இஸ்லாமியரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அங்கு எந்த கலவரமும் ஏற்படவில்லையே. இந்த விவகாரத்தை திமுக அரசு மதக் கலவரமாக சித்தரிப்பது தவறு. இது இந்து உரிமைகளை மீறும் முயற்சி" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நயினார் நாகேந்திரன் கருத்துக்கு பதில் அளித்துள்ள தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "வடமாநிலங்களில் வேண்டுமானால் பா.ஜ.கவினர் நினைத்த செயல் நடைபெறலாம். தமிழ்நாட்டில் நடக்காது. தமிழ்நாடு அயோத்தியாக மாறும் என்ற நயினார் நாகேந்திரனின் கனவு பகல் கனவாகவே முடியும். இது திராவிட மண், இது ராமானுஜர் மண். இதுபோன்ற செயல்களுக்கு மக்கள் அனுமதி தரமாட்டார்கள்" என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
"சாதி, மத, இன மொழிகளுக்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டில் பா.ஜ.க. திட்டங்கள் எல்லாம் எடுபடாது. சனாதனம் மட்டுமல்ல எந்தவொரு கொள்கையும் மக்களை பிளவுபடுத்த கூடாது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிமுகவில் உள்ளவர்கள் ஆளாளுக்கு ஒரு நிலைப்பாட்டில் இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் அதிமுக ஆகாய பல்டி அடிக்கிறது. பாஜகவிடம் முழுவதும் அடிமைபடுத்தப்பட்ட அ.தி.மு.க. என்ற தேர் 2026-ல் நிலைக்கு வராது" எனத் தெரிவித்துள்ளார்.
-
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்?












Click it and Unblock the Notifications