10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்.. அமைச்சர் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் காலாண்டு , அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு தேர்ச்சி என்பது முடிவு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

Minister Sengottaiyan says about 10th standard exam results

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் முடிவெடுக்கப்படும்.

மும்மொழிக் கொள்கை தொடர்பாக முதலமைச்சர் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டார். 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும். ஐடெக் லெப் மூலம் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படிக்க முடியும் என்றார் செங்கோட்டையன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+