தேர்வு நேரம் நெருங்குகிறது.. மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை கைவிடுங்கள்- செங்கோட்டையன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்வு நேரம் நெருங்கி வருகிறது. இதனால் மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை கைவிடுங்கள் என அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7ஆவது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித முரண்பாடுகளை களைய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

Minister Sengottaiyan urges school teachers to give up the protest

21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும் 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு இன்று முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தது.

அதன்படி இன்று காலை 10 மணிக்கு மாநிலத்தின் அனைத்து தாலுகாக்களிலும் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் தொடங்கியது. சென்னையில் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு சென்ற கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும்.

தேர்வு நேரத்தில் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். செய்முறை தேர்வுகளும் நெருங்குகிறது. எனவே ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+