Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'சகோதரரே, மின் இணைப்பு எண்ணை தர இயலுமா?' நெட்டிசனுக்கு அமைச்சர் கொடுத்த ரிப்ளை.. ட்விட்டரில் ரணகளம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : மின் வெட்டு தொடர்பாக பதிவிட்ட நெட்டிசனிடம், அமைச்சர் செந்தில் பாலாஜி, "சகோதரரே, மின் இணைப்பு எண்ணை தர இயலுமா?" என்று கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட நபர் அந்த ட்வீட்டை நீக்கிய நிலையில், அவதூறு பரப்பிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவினர் பாய, எதிர் தரப்பினரோ ஊருக்கே மின் தடை இருக்க ஒருவரின் நம்பரை கேட்டு என்ன செய்ய என விமர்சிக்க ட்விட்டரே ரணகளமானது.

கோடைகாலம் என்பதால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மின்வெட்டு இருந்து வருவதாக மக்களிடையே புகார்கள் வருகின்றன. ஆனால், தமிழ்நாடு மின் வாரியம் அவற்றை மறுத்து வருகிறது. நாளுக்கு நாள் மின் நுகர்வு உச்சமடைந்து வந்தாலும், எவ்வித மின்வெட்டும் இன்றி மின் தேவை ஈடுகட்டப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவ்வப்போது புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறார்.

 Minister senthil balaji reply to netizen tweet : stir on social media

இந்நிலையில், மின்வெட்டு தொடர்பாக விமர்சித்து ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியும் உடனடியாக ரிப்ளை கொடுத்தார். "சகோதரரே, மின் இணைப்பு எண்ணை தர இயலுமா?" என அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்க, பதிவிட்ட நபர் தனது ட்வீட்டை உடனடியாக நீக்கினார்.

இதைத் தொடர்ந்து, திமுக மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே ட்விட்டரில் பெரிய ரணகளமே நடந்தது. பொய் குற்றச்சாட்டு சொன்னவர் அமைச்சர் கேள்வியால் பதறிப்போய் ட்வீட்டை நீக்கிவிட்டார் என திமுகவினரும், அமைச்சர், பொதுமக்களிடம் மிரட்டுவது போல பேசுவதாகவும், மின் தடை என புகார் தெரிவித்தார் மிரட்டுவதா என்றும் எதிர்க்கட்சியினர் பதிவிட்டு வருகின்றனர்.

திமுக அரசு மீதும், மின்சார வாரியத்திற்கு எதிராகவும் அவதூறு பரப்பிய அந்த நபர் மீது, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக ஆதரவாளர்கள் செந்தில் பாலாஜியிடம் முறையிட்டனர். இதையொட்டி ட்விட்டரில் திமுகவினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே பெரிய ரணகளமே ஏற்பட்டது.

பின்னர், அந்த ட்வீட்டை பதிவிட்ட நபரே, "பொதுவெளியில் தரவேண்டிய அவசியம் இல்லையே அமைச்சரே? இரண்டாவது மீட்டருக்கு எழுதிக்கொடுத்து மாதக்கணக்காகிறது வந்தபாடில்லை? வீட்டுக்குள் புகுந்த பாம்புடன் நெல்லை ஆட்சியர் அலுவலகம் வந்த ஆம்பள இல்லாத வீட்டுக்கு மின் இணைப்பு குடுத்திருக்கா உங்க அரவணைப்பில் இருக்கும் மின்வாரியம்?" என கேள்வியெழுப்பி மற்றொரு ட்வீட்டை பதிவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+