சென்னைக்கு படையெடுத்த செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்! இன்று தான் கிளைமேக்ஸ்! உச்சகட்ட பரபரப்பு!
சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை மற்றும் கரூரிலிருந்து அவரது ஆதரவாளர்கள் சென்னைக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
செந்தில்பாலாஜி அழுது இதுவரை பார்த்திராத அவரது ஆதரவாளர்கள், முதல்முறையாக சுருண்டு அழும் காட்சிகளை பார்த்ததும் மனம் கேட்காமல் சென்னைக்கு புறப்பட்டு விட்டனர். இதனிடையே ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் யார் வந்தாலும் உள்ளே செல்ல அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் இல்லத்தில் நேற்று காலை 7 மணியளவில் தொடங்கிய அமலாக்கத்துறை விசாரணை நள்ளிரவு வரை நீண்டது. இந்த விசாரணையின் போது அமைச்சர் செந்தில்பாலாஜியை கேள்விகணைகளால் அதிகாரிகள் துளைத்தெடுத்து விட்டனர்.
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது நிகழ்ந்ததாக கூறப்படும் ஜாப் ராக்கெட் கேஸ் முதல் புது வீடு கட்டிக் கொண்டிருப்பது வரை செந்தில்பாலாஜியை நோக்கி கேள்விகள் வந்திருக்கின்றன. அவரும் கேசுவலாக கூலாகவே பதில் அளித்து வந்திருக்கிறார். பிறகு நேரம் செல்ல செல்லத்தான் அமலாக்கத்துறை தனது பிடியை சற்று இறுக்கியுள்ளது.

அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே சில ஆதாரங்களை அவர் முன் வைத்திருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள். இதனால் செந்தில்பாலாஜியின் பிபி உயர்ந்ததோடு இதயத்துடிப்பிலும் மாறுதல் தென்பட்டிருக்கிறது. இதையடுத்து உடனடியாக நள்ளிரவே ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவல் அறிந்ததும் கோவை மற்றும் கரூர் மாவட்ட திமுக முக்கிய பிரமுகர்களும், ஆதரவாளர்களும் அதிகாலையிலே சென்னைக்கு புறப்பட்டு விட்டனர். அவர்கள் வந்து சேர மதியம் ஆகிவிடும் என்ற சூழலில் அதற்குள் செந்தில்பாலாஜி டெல்லி அழைத்துச் செல்லப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications