மின்சார வாரியத்தில் காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? அமைச்சர் செந்தில்பாலாஜி சொன்ன பதில்!
சென்னை: மின்சார வாரியத்தில் பணி எதிர்பார்த்து தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் சூழலில், காலிப்பணியிடங்கள் நிரப்புவது பற்றிய முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
சென்னையில் உள்ள மின்னகத்தை ஆய்வு செய்த அவர் அதன்பிற்கு செய்தியாளர்களை சந்தித்த போது காலிப்பணியிடங்கள் நிரப்புவது பற்றி பேசினார்.
அதன் விவரம் வருமாறு;

மின்னகம்
''மின்னகத்தின் மூலம் 9,16,000 புகார்கள் வரப்பெற்று இருக்கின்றன, இதில் 9,11,000 புகார்களுக்கு, குறிப்பாக, 99.45 விழுக்காடு புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வுகள் காணப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு ஆய்வுப் பணிகளின்போதும், பயணத்தின் போதும் பொதுமக்களும், தொழில் முனைவோர்களும் என்னிடம் சொல்வது மின்னகம் ஒரு பயனுள்ளதாக இருக்கிறது என்பது தான்.''

மின் வாரிய பணிகள்
''வரக்கூடிய ஆண்டுகளில் சிறப்பாக சேவைகளை செய்வதற்காக பல்வேறு முன்னேடுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. APP மூலமாக மக்கள் மின் தடை குறித்த புகார்களை தெரிவிக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. காலி பணியிடங்கள் நிதிநிலைகேற்ப, தேவைகளுக்கேற்ப முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிரப்பப்படும்.''

6,220 மெகாவாட்
''வரக்கூடிய 5 ஆண்டுகளில் 6,220 மெகாவாட் அளவிற்கு மின்வாரியத்தின் சொந்த உற்பத்தியை நிறுவுதிறனில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒன்றிய அரசை பொறுத்தவரை எரிசக்தி துறை மூலமாகவோ நிலக்கரி துறை மூலமாக நமக்கு தேவையான அளவிற்கு 21.92 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டுமென்று கடிதம் வரப்பெற்றுள்ளது.''

ஸ்காட்லாந்து பயணம்
''கடிதம் வருவதற்கு முன்பாகவே முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக டெண்டர் கோரப்பட்டு இறக்குமதிக்கான ஆணைகள் வழங்கப்பட்டு, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் குறைந்த விலையில் நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடலில் காற்றாலை மின் உற்பத்தி சம்மந்தமாக 5 நாள் பயணமாக ஸ்காட்லாந்து செல்கிறோம்.''












Click it and Unblock the Notifications