Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு பஸ் ஊழியர்களுக்கு கொட்டப்போகுது பணம்.. அமைச்சர் சிவசங்கர் சொன்னதை கவனிச்சீங்களா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.17.15 கோடி, ஒப்பந்த நிலுவைத் தொகை ரூ.171.05 கோடி வழங்க உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாநகர போக்குவரத்து கழகங்கள், அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட 8 போக்குவரத்து கழகங்கள் இருக்கின்றன.

Minister Sivashankar announced 171 crore arrears for govt bus employees

எட்டு போக்குவரத்து கழகங்களில் சேர்த்து மொத்தம் 20,127 பஸ்கள் உள்ளன. இவற்றில் 18,723 பஸ்கள் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரம் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் களுக்கான காலி பணியிடங்கள் அதிகரித்து வருவதால் பஸ்களின் இயக்கத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இது ஒருபுறம் எனில் தமிழக போக்குவரத்து கழகங்களில் இந்த வார இறுதிக்குள் 600 முதல் 700 டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பணி ஓய்வு பெற உள்ளனர். இதனால் போக்குவரத்து கழகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை மேலும் குறையும். இதன் காரணமாக பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருக்கிறது.

இந்நிலையில் பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, பண பலன்களை அரசு வழங்க வேண்டிய உள்ளது. ஏராளமான போக்குவரத்துக் கழக ஊழியர்கள், ஓய்வுக்கு பின்பான பண பலனுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.17.15 கோடி, ஒப்பந்த நிலுவைத் தொகை ரூ.171.05 கோடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து வரும் 1.14 லட்சம் பணியாளர்களால், தினமும் 20 ஆயிரத்து 111 பஸ்கள் வரை இயக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் 1.70 கோடி பயணிகள் தினமும் பயன் பெறுகின்றனர்.

கொரோனா பெருந்துயர் காலமான 2020, 2021-ம் ஆண்டுகளில் மக்களின் உயிர்காக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்ட முழு அடைப்பின்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் அத்தியாவசியமான பஸ் சேவைகளுக்காக, பஸ்களை இயக்கின. அப்போது, போக்குவரத்து பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பணிபுரிந்தனர். அவ்வாறு பணிபுரிந்த தொழிலாளர்களை கவுரவிக்கும் வகையில், முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.17.15 கோடி வழங்குவதற்கு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.

நிலுவைத்தொகை : மேலும், கொரோனா காலத்துக்கு பின்னர், போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருந்த போதிலும், தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, 14-வது ஊதிய ஒப்பந்தத்தை 1-9-2019 முதல் அமல்படுத்தி, ஊதிய உயர்வு அளித்து, அதன்படி தற்போது ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரை உள்ள காலத்துக்கான ஊதிய நிலுவைத்தொகையான ரூ.171.05 கோடி வழங்குவதற்கு முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஆணை வெளியிடப்பட்டு உள்ளது" இவ்வாறு அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+