சேப்பாக்கம் தொகுதி பள்ளிகளுக்கு உதயநிதி தந்த கிஃப்ட்! ஜப்பான் டெக்னாலஜி! கற்றல் கற்பித்தல் இனி ஈஸி!
சென்னை: சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் ஜப்பான் டிஜிட்டல் தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி மாணவர்கள் எளிதாக கற்கும் முறையினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
ஜப்பான் தொழில்நுட்ப முறைகளை பள்ளிகளில் பயன்படுத்துவதன் மூலம் ஆசிரியர்களின் கற்பித்தல் முறை, மாணவர்களின் கற்றல் முறை எளிதாக்கப்பட்டு, பொதுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளை சுலபமாக மாணவர்கள் எதிர்கொள்ள வழிவகை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவரம் வருமாறு;
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 18 சென்னைப் பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் காட்சிப்படுத்தும் சாதனம் மற்றும் வரைப்பட்டிகை ஆகிய ஜப்பான் டிஜிட்டல் தொழில்நுட்பச் சாதனங்கள் ரியான் டெக் நிறுவனத்தின் சார்பில் விலையில்லாமல் வழங்கப்பட உள்ளது.
இதில் முதற்கட்டமாக, சிந்தாதிரிப்பேட்டை சென்னை உயர்நிலைப்பள்ளி, கொய்யாத்தோப்பு சென்னை தொடக்கப்பள்ளி மற்றும் சென்னை உயர்நிலைப்பள்ளி, இருசப்பா தெரு சென்னை உயர்நிலைப்பள்ளி மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்னை நடுநிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளில் ரியான் டெக் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட ஜப்பான் டிஜிட்டல் தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி கற்றல், கற்பித்தல் முறை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் சிந்தாதிரிப்பேட்டை, மேற்கு கூவம் ஆற்றுச்சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்தத் தொழில்நுட்ப முறைகளை பள்ளிகளில் பயன்படுத்துவதன் மூலம் ஆசிரியர்களின் கற்பித்தல் முறை, மாணவர்களின் கற்றல் முறை எளிதாக்கப்பட்டு, பொதுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளை சுலபமாக மாணவர்கள் எதிர்கொள்ளவும்
வழிவகை செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications