ஈரோட்டில் களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. 2 நாட்கள் தீவிர பிரச்சாரம்.. தொண்டர்கள் உற்சாகம்!
ஈரோடு கிழக்கில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிப்.19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏராளமான அமைச்சர்கள் ஈரோட்டில் வாக்கு சேகரித்து வரும் சூழலில், உதயநிதி ஸ்டாலினும் பிரச்சாரம் செய்ய உள்ளது அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4ம் தேதி மரணம் அடைந்தார். இதனால் அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் பலர் வந்து ஆர்வமாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள். ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்கள்.

வேட்பாளர்கள்
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே .எஸ். தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளார்கள். அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளர் செந்தில் முருகனும், அமமுக வேட்பாளர் சிவபிரசாத்தும் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவார்கள் என்று அந்தந்த கட்சிகளின் தலைமை அறிவித்துள்ளது.

வாக்கு சேகரிப்பு
இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை மொத்தம் 96 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. அதேபோல் அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தொண்டர்களும், நிர்வாகிகளும் தீவிரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

ஈரோட்டில் உதயநிதி ஸ்டாலின்
திமுக தரப்பில் ஈரோடு இடைத்தேர்தலுக்காக 11 அமைச்சர்கள் தலைமையிலான படை களமிறக்கப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துசாமி தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் பிப். 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல் பிரச்சாரம்
ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தெருத் தெருவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரம் மக்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல் மூலம் செய்த பிரச்சாரம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதனால் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்!












Click it and Unblock the Notifications