மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்!
சென்னை: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ளவர் உடுமலை ராதாகிருஷ்ணன். இவர் தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து மருத்துவமனைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சென்று அமைச்சரிடம் நலம் விசாரித்தனர். அவரது உடல்நலம் சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் நலம் விசாரிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனைக்கு சென்றார். அவரது உடல்நிலை சீராக உள்ளதால் முதல்வர் நலம் விசாரிப்புக்கு பிறகு அமைச்சர் வீடு திரும்பினார்.












Click it and Unblock the Notifications