அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் முற்றுகை.. போலீஸ் குவிப்பு.. பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நீக்கப்பட்டதை எதிர்த்து, அவரது ஆதரவாளர்கள் சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பாக, திருப்பூர் புறநகர் மாவட்டம் உட்பட மூன்று மாவட்ட செயலாளர்களை அதிமுக தலைமை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது.

Minister Udumalai Radhakrishnan stage dharna infront of aiadmk head office

இதில் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள், தங்கள் தலைவருக்கு ஆதரவாக இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் நேரடியாக வந்து முற்றுகையிட்டதை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ஆதரவாளர்கள் நடுவே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதிமுக கட்சி தலைமைக்கு எதிராக அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களே களத்தில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த மோதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+