ஒரு வழியா விட்டாங்க.. ஆறுமுகசாமி ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பல மணி நேரம் விசாரணை
ஆறுமுகசாமி ஆணையம் முன்பு இன்று ஆஜரானார் அமைச்சர் விஜயபாஸ்கர்
Recommended Video

சென்னை: ஒருவழியாக 4-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் கிட்டத்தட்ட 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுக சாமி ஆணையத்தின் விசாரணை தற்போது இறுதி கட்டத்தை தொட்டுள்ளது. ஏற்கனவே இது சம்பந்தமாக ஜெயலலிதா உறவினர்கள், சசிகலா உறவினர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், சிகிச்சை அளித்த மருத்துவமனை என எல்லாரிடமும் விசாரணை நடத்தப்பட்டுவிட்டது.
எனினும் இதில் முக்கியமான சாட்சியாக உள்ளது விஜயபாஸ்கர்தான். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தபோது, சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையிலும் டாக்டர் என்ற முறையிலும், விஜயபாஸ்கர் உடன் இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த கருத்தை பல அமைச்சர்களும் ஏற்கனவே பலமுறை சொல்லி இருந்தன

3 முறை சம்மன்
அதனால் இது சம்பந்தமாக அமைச்சரிடம் விசாரிக்க இருப்பதாக ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது. அது மட்டுமின்றி, ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்வது மற்றும் அவருக்கு செய்த அறுவை சிகிச்சை தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதனால் ஆணையத்தில் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் 3 முறை சம்மன் அனுப்பி இருந்தது.

4-வது முறை சம்மன்
ஒவ்வொரு முறையும் அமைச்சர் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எல்லாம் ஆஜராகாமலேயே இருந்தார். இதற்கான காரணமும் இதுவரை முறையாக சொல்லப்படவில்லை. இந்நிலையில் 4-வது முறையாக ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளதால், விஜயபாஸ்கர் இப்போது ஆஜராகி இருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம்
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அப்போதைய பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எல்லாம் தெரியும் என்று அறிக்கை விட்டவர்தான் விஜயபாஸ்கர்.

கருத்து சொல்லவில்லை
அதுவும் இல்லாமல், "ஜெயலலிதாவை ஏன் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்லவில்லை, முறையான சிகிச்சை தந்திருந்தால் அவர் உயிருடன் இருந்திருப்பார் என்று அமைச்சர் சிவி சண்முகம் பரபரப்பு பேட்டி அளித்தபோதுகூட எதுவுமே கருத்து சொல்லாமல்தான் இருந்தார் விஜயபாஸ்கர்.

பெரும் எதிர்பார்ப்பு
இப்போது முதல்முறையாக ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜரானார். அவரிடம் பலமணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ஒரு அமைச்சர் பொறுப்பில் உள்ளவர் ஆணையத்தில் ஆஜராவது இதுவே முதல்முறை ஆகும். காலை 10 மணிக்கு ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கரிடம், ஜெயலலிதா சிகிச்சை சம்பந்தமான பல்வேறு கேள்விகள் சரமாரியாக எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications