கூலி அரசியல்வாதி சீமான்.. அமைச்சர்கள் சரமாரி அட்டாக்.. தமிழ்த் தாய் பாடல் பேச்சுக்கு பதிலடி
சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தூக்கி எறிய வேண்டும் என்ற சீமானின் கருத்துக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் சிவசங்கர், சீமானை கூலி அரசியல்வாதி என குறிப்பிட்டு, அவர் பேசும் வார்த்தைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மனோன்மணியம் சுந்தரனார் காலத்தில் இருந்து தமிழகத்தின் பெருமையை குறிக்கும் ஒரு சின்னமாக இருந்து வருவதாகவும், இதனை அறிந்த ஒருவர் இவ்வாறு பேசமாட்டார்கள். ஆனால் சீமான் பேசுகிறார். எனவேதான் அவரை அரசியல் கூலி என்கிறோம். அவரை மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, இந்தியா முழுவதும் பிரபலமாகி வரும் ராபிட்டோ பைக்குகள் வாடகைக்கு பயன்படுத்தப்படுவதால், பாதுகாப்பு குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ராபிட்டோ பைக்குகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். இந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் ராபிட்டோ பைக்குகளை இயக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கல்வி நிதி குறித்த விமர்சனம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சீமானின் கருத்து கல்வித்துறைக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார். மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ் கல்வி மற்றும் பொது சுகாதாரத்துக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ளதாக கூறியிருப்பதை மறுத்துள்ளார். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications