கொடநாட்டில் என்ன நடந்தது.. மர்மம் என்ன.. நீதி விசாரணைக்கு ஆணையிடுங்கள்.. ஸ்டாலின் கோரிக்கை!
சென்னை: கொடநாடு விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும், இல்லையென்றால் தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: கொடநாடு விவகாரத்தில் எந்த பதிலையும் தராத முதல்வர், வழக்கு மட்டுமே நடப்பதாக கூறுகிறார்.
கொடநாடு விவகாரத்தை வெளியிட முடியாத அளவுக்கு தமிழக ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன என்றும் குற்றம்சாட்டினார்.

நீதி விசாரணை தேவை
நீதி விசாரணை நடத்தப்படும் என முதல்வரால் கூற முடியுமா? ஒரு கொலைக்குற்றவாளி முதல்வராக இருப்பது தமிழ்நாட்டில்தான் என பத்திரிகையாளர் மேத்யூ கூறியுள்ளார்; இதைவிட அசிங்கம் தமிழகத்திற்கு எதுவும் இல்லை. கொடநாடு விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும், இல்லையென்றால் தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்

உள்ளாட்சி தேர்தல் எப்போது?
உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு நடத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது கிராமங்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.

ஸ்டாலின் விளக்கம்
உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கூடாது என திமுக வழக்கு தொடரவில்லை, முறையாக நடத்தவேண்டும் என்றே வழக்கு தொடர்ந்தோம்.

முதல்வருக்கு பதில்
2006ல் 4 ஊராட்சி மக்களிடம் சுமுகமாக பேசி உள்ளாட்சி தேர்தலை நடத்தியது திமுகதான். மு.க.ஸ்டாலின் துணை முதல்வர், அமைச்சராக இருந்தபோது கிராமங்களுக்கு சென்றாரா என முதல்வர் பழனிசாமி கூறியதற்கு பதிலளித்தார்.

அமைச்சர் சவால்
இதற்கிடையே, கொடநாடு கொலை வழக்கில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்றும், அண்ணாநகர் ரமேஷ் மற்றும் சாதிக் பாஷா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு ஸ்டாலின் தயாரா? என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications