முதல்வர் பழனிச்சாமிக்கு இருப்பது இதயமா? இரும்பா? - ஸ்டாலின் கேள்வி
சென்னை: புயல் பாதித்த இடங்களுக்கு செல்லாத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருப்பது இதயமா இல்லை இரும்பா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறுகையில் கஜா புயல் பாதிக்கப்பட்ட
இடங்களுக்கு நேரில் செல்லாத முதல்வரை கண்டிக்கிறேன். நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளன. பல லட்சம் தென்னை மரங்கள் அழிந்ததால் பல்லாயிரம் மக்கள் வாழ்வாதாரம் இழந்து விட்டனர்.
4 நாட்களாக பரிதவிக்கும் மக்களை பார்க்க முதல்வருக்கு நேரமுமில்லை. மனமுமில்லை. ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் உள்ளதாக காரணம் காட்டி கொண்டிருக்கிறார். பேரிடர் நேரத்தில் சராசரி மனிதருக்கே இதயம் துடித்துடித்து ஓடிப்போய் உதவுவார்கள்.

இதயம் இல்லையா
முதல்வராக இருப்பவர்களுக்கு மக்கள் நிலையை பார்த்து இதயம் துடித்துடித்திருக்க வேண்டாமா?. ரிப்பன் வெட்டவும் கொடி அசைக்கவும் சென்று கொண்டிருக்கிறார். புயல் பாதிப்பை பார்வையிட செல்லாத முதல்வருக்கு இருப்பது இதயமா, இரும்பா. கஜா புயல் தாண்டவமாடிய நிலையில் எங்கோ சுற்றிக் கொண்டிருக்கிறார் முதல்வர்.
[புயல் பாதித்த இடங்களை நாளை மறுநாள் பார்வையிடுவார் முதல்வர்.. இன்று ஏன் செல்லவில்லை?.. விளக்கம்! ]
|
பாராட்டு
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மையின் #CycloneGaja முன்னேற்பாடு நடவடிக்கைகளை பாராட்டியிருந்தேன்! ஆனால், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்த்தால் மீட்புப் பணிகள் படுமோசமாக இருக்கிறது. குக்கிராமங்களுக்கு இன்னும் அரசு இயந்திரம் செல்லவேயில்லை! இதனை பார்வையிட தமிழக முதலமைச்சருக்கு தயக்கம் ஏன்? என்பது தெரியவில்லை.
|
8 மாவட்டங்கள்
மழை வரும் காலத்திற்கு முன்பே முறையாக கால்வாய்களை, ஏரிகளை, ஆறுகளை தூர் எடுக்கின்ற பணியை அரசு முறையாக நடத்திடவில்லை என்பதை இந்தப் புயல் பாதிப்பு தெளிவாக காட்டுகிறது. பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களைப் பொறுத்தவரையில் இந்தப் புயலின் காரணத்தால் மின்சாரம் அறவே துண்டிக்கப்பட்டிருக்கிறது. எனவே, உடனடியாக மின்தடை ஏற்பட்டு இருக்கக்கூடிய பகுதிகளில் அதற்குரிய நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்.

25 லட்சம் நிதி தேவை
புயலால் இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் நிதி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அது போதுமானதாக நிச்சயமாக இருந்திட முடியாது, குறைந்தபட்சம் 25 லட்ச ரூபாய் அவர்களுக்கு வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசினுடைய வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தித் தரவேண்டுமென வலியுறுத்துகிறேன்.

வாழை
புயலால் அழிந்த தென்னை ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். மா, புளி, வேம்பு, தேக்கு மரங்களை இழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வேண்டும்.சாய்ந்த வாழை மரங்களை மீட்க வேளாண் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications