இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் பாட தடை விதிப்பதா? மு.க. ஸ்டாலின் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுதந்திர தினம் பிப்ரவரி 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. கொழும்பு சுதந்திர தின சதுக்கத்தில் இந்த விழா நடைபெறும்.

இவ்விழாவில் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என புதிய அதிபர் கோத்தபாய ராஜபக்சேவின் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது தமிழர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், இலங்கையில் தேசிய கீதம் சிங்களத்தில்தான் இசைக்கப்படும் என அறிவித்திருப்பது துரதிருஷ்டவசமானது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications